முத்துப் போன்ற சோளன் வேக வைத்து
முத்தம் கொடுக்கும் முத்து அத்தானுக்கு
முத்தம்மா நான் கொடுப்பேன் அன்பாக.
சங்குப் பல் கொண்டு சின்னச் சிரிப்புடன்
கொறிக்கும் மச்சானுக்கு சுவை கொஞ்சம்
தூக்கலாக இருக்க சிறு உப்பும் போட்டு
வேக வைப்பேன்.
காடு வெட்டி நிலமாக்கி விட்டதோ என் பூட்டன்.
சொத்தாக்கி கொண்டதோ என் பாட்டன்.
அதில் விதை போட்டு விளைச்சல் .
உண்டாக்கி விட்டதோ என் அப்பன்.
அங்கே பங்கு எடுத்து நான் சுவைக்க
கொடுப்பதோ என் மச்சானுக்கு.
ஓசி சோளன் மச்சான் ஆசையாய்
உண்ணு மச்சான் காசி கேட்க ஆள்
இல்லை வேண்டாம் என்று சொல்லாதே
என் முத்து மச்சான் .
No comments:
Post a Comment