Saturday 5 December 2015

மீண்டு வரும் வலி

விடுமுறை நாளான இன்றைய நாள்
மழையின் விடுமுறையாக அமையட்டும் .....////

ஞாயிறு இருள் நீக்கி அனைத்து
இல்லத்திலும் ஒளி மின்னட்டும் ....////

அடைந்த கஸ்ரங்களை எண்ணி
ஏங்காது விழிகள் கொஞ்சம் உறங்கட்டும் ......////


கவலைகளை தலையணையாக
வைத்து கண் உறங்குங்கள் மக்களே .....///


காலம்  கை கொடுத்தால் மீண்டு
வரலாம் இழப்பின் பிடியில் இருந்து ...///

உயிரைப்  பறி கொடுத்த உறவுகளால்
மீண்டு வர வழியில்லை
 துவண்டு விடாதீர்கள்
உள்ளத்தால் மீண்டு வாருங்கள் .....////

வலி மாறாது காயத்தை போக்க முயற்சி
பண்ணுங்கள் எந்த நாடு எந்த அரசி
உதவினாலும் திரும்பக் கிடைக்கப்பெற
முடியாத இழப்பு அவை  .......//////

எல்லாம்  அவன் செயல் என்பதை
 மறவாதீர்கள் உறவுகளே  வாழ்க்கை
உங்கள் கரங்களிலே வாழ்ந்து
காட்டுங்கள் ........///////

வாழ்த்துக்கள் ....////


      கவிக்குயில் ஆர். எஸ் கலா

No comments:

Post a Comment