திறமையானவன் நீ என்றாலும்  
அறிவாளி என்றாலும்  
பல படைப்புக்கள் கொடுத்த 
கவிஞன் என்றாலும்  
விருதுகளை குவித்த 
கலைஞன் என்றாலும்  .....////
புகழின் உச்சியில் அமர்ந்த 
அறிஞன் என்றாலும்  
பொறுமை காக்காவிட்டால்  
சிறுமையாகி விடும் 
உன் புகழ் அங்கே......./////
கிரீடம் ஏறினாலும் 
உன் தலைதான் 
தாங்குகின்றது 
 தலைக்கணம் 
 கூடினாலும் 
உன் தலைதான் 
தாங்குகின்றது ......////
 இரண்டுக்கும் 
வேறுபாடு உண்டு  
இரண்டில் ஒன்று
 வந்து அமர்வது 
உன்தலையில் 
 உன் நன் நடத்தையின்
 பயன் கண்டு.....////
 என்னை விட சிறந்தவன் இல்லை  
என்னை விட அறிந்தவன் இல்லை  
என பிறரை துஷ்ரமாக நினைத்து 
தூக்கி  ஏறிந்தால்  இறுதியில் 
நீ அனாதை .....////
தன் அடக்கம் நாவு அடக்கம் 
கற்று நல்லோர் வல்லோர் அறிந்து 
 உண்மை உள்ளத்தைப் புரிந்து  
நன்மைக்கு துணை நின்று 
தீமைக்கு தலை அசைத்து ......////
 மோதல்  புலம்பல் என கவிதையாலே 
சாடாது விடுத்து  உள்ளதை உள்ள 
படி கூறி உன்னதமான வாழ்வை 
விரும்பிப் பார்  அன்று 
கிடைக்கும் நிம்மதிதான் 
நிலையான பரிசு ......./////
பகை என்று விட்டு ஒதிங்கி விட்டு 
பட்டத்துக்காக கால் தொட்டால்  
கவிஞன் என்ற பெயர் உன்னிடம் 
தங்கிடுமோ  கெட்ட நாக்குகள் 
இதைக் காட்டி சொல்லிக் 
கொட்டாமல் விட்டு விடுமோ...../////
 
No comments:
Post a Comment