Monday, 28 December 2015

சிந்தனை அவசியமட கவிஞனே

திறமையானவன் நீ என்றாலும் 
அறிவாளி என்றாலும் 
பல படைப்புக்கள் கொடுத்த
கவிஞன் என்றாலும் 
விருதுகளை குவித்த
கலைஞன் என்றாலும்  .....////

புகழின் உச்சியில் அமர்ந்த
அறிஞன் என்றாலும் 
பொறுமை காக்காவிட்டால் 
சிறுமையாகி விடும்
உன் புகழ் அங்கே......./////

கிரீடம் ஏறினாலும்
உன் தலைதான்
தாங்குகின்றது
தலைக்கணம்
கூடினாலும்
உன் தலைதான்
தாங்குகின்றது ......////

இரண்டுக்கும்
வேறுபாடு உண்டு 
இரண்டில் ஒன்று
வந்து அமர்வது
உன்தலையில்
உன் நன் நடத்தையின்
பயன் கண்டு.....////

என்னை விட சிறந்தவன் இல்லை 
என்னை விட அறிந்தவன் இல்லை 
என பிறரை துஷ்ரமாக நினைத்து
தூக்கி  ஏறிந்தால்  இறுதியில்
நீ அனாதை .....////

தன் அடக்கம் நாவு அடக்கம்
கற்று நல்லோர் வல்லோர் அறிந்து
உண்மை உள்ளத்தைப் புரிந்து 
நன்மைக்கு துணை நின்று
தீமைக்கு தலை அசைத்து ......////

மோதல்  புலம்பல் என கவிதையாலே
சாடாது விடுத்து  உள்ளதை உள்ள
படி கூறி உன்னதமான வாழ்வை
விரும்பிப் பார்  அன்று
கிடைக்கும் நிம்மதிதான்
நிலையான பரிசு ......./////

பகை என்று விட்டு ஒதிங்கி விட்டு
பட்டத்துக்காக கால் தொட்டால் 
கவிஞன் என்ற பெயர் உன்னிடம்
தங்கிடுமோ  கெட்ட நாக்குகள்
இதைக் காட்டி சொல்லிக்
கொட்டாமல் விட்டு விடுமோ...../////

No comments:

Post a Comment