மாந் தோப்புக்குள்ளே
மஞ்சள் குருவி ஒன்று
அங்கும் இங்கும் தத்தி
தத்தி நடக்கையிலே
என்னை அழைத்து சுட்டிக்
காட்டி குறும்பு பண்ணி என்
கன்னம் கிள்ளி அன்பு முத்தம்
பதிச்ச மச்சான் .......////
பூந் தோட்டத்திலே பூ எடுக்கும்
வேளையிலே பூவரசம் பூவோடு
என்னிரெண்டு கரங்களையும்
இறுக்கப் பற்றி இழுக்கையிலே
தோழி அவள் குறுக்க வந்து
தடுக்கையிலே சிறு முறைப்போடு
நகர்ந்த மச்சான் ....../////
சல சல என்று ஓடும் ஓடையிலே
குமரிக்கூட்டங்கள் ஒன்றாக
குளிக்கையிலே கூடவே வந்த
என்னைக் குறி வைத்து நீரின்
உள்ளே மறைந்து இருந்து
இழுத்து அணைத்து நீச்சல்
கற்றுக்கோ என்று அடம்
பிடித்த மச்சான் .......//////
அம்மன் ஆலயத்திலே ஐயனார்
சிலை அருகே பொய்யான
பத்தியோடு கண்ணை மூடுவது
போல் பாவனை காட்டிய வாறே
பாதையிலே ஓரப்பார்வை வீசிய
வண்ணம் எனக்காகக் காத்திருந்த
மச்சான் ........///////
சந்தைக்கு நான் போகையிலே
தன் தந்தைக்கு தெரியாமல்
மந்தையோடு மந்தையாக வண்டி
ஏறி வந்த மச்சான் ....../////
இன்று சந்தி சந்தியாக
காத்திருக்கின்றேன் உன்
சங்கதி சொல்ல ஆளையே
காணோம் மச்சான் ..../////
கஞ்சி குடிக்கும் காலத்திலே
இந்த வஞ்சியை சுத்தி சுத்தி
வந்த மச்சான் ...../////
சிறுகச் சிறுக. பணத்தைப் பார்த்த நீ
கையிலே சொத்து சேர்ந்ததும்
கண்டுக்காமலே போனது
ஏனோ மச்சான் ......////
கொஞ்ச நாளாக நீ மாறி
விட்டாயே மச்சான் இந்த
வஞ்சி மனம் பஞ்சாய் எரிகிறது
மச்சான் .......//////
உன் பட்டணத்தின் வாழ்வின்
மாற்றம் கண்டு பட்டிக்காட்டு
பொண்ணு உள்ளம் தீ சுட்ட
புண்ணாக போனது மச்சான் ....///
No comments:
Post a Comment