மாந் தோப்புக்குள்ளே 
மஞ்சள்  குருவி  ஒன்று
அங்கும் இங்கும் தத்தி
தத்தி  நடக்கையிலே 
என்னை அழைத்து  சுட்டிக்
காட்டி  குறும்பு பண்ணி என்
கன்னம்  கிள்ளி  அன்பு முத்தம்
பதிச்ச மச்சான் .......////
பூந் தோட்டத்திலே  பூ  எடுக்கும்
வேளையிலே  பூவரசம் பூவோடு
என்னிரெண்டு கரங்களையும் 
இறுக்கப் பற்றி இழுக்கையிலே
தோழி அவள் குறுக்க வந்து
 தடுக்கையிலே  சிறு முறைப்போடு
நகர்ந்த மச்சான் ....../////
சல சல என்று ஓடும் ஓடையிலே
குமரிக்கூட்டங்கள் ஒன்றாக 
குளிக்கையிலே  கூடவே வந்த
என்னைக் குறி வைத்து நீரின்
உள்ளே மறைந்து இருந்து 
இழுத்து அணைத்து நீச்சல்
கற்றுக்கோ என்று அடம்
பிடித்த மச்சான் .......//////
அம்மன் ஆலயத்திலே ஐயனார்
சிலை அருகே  பொய்யான 
பத்தியோடு  கண்ணை மூடுவது
போல் பாவனை காட்டிய வாறே
பாதையிலே ஓரப்பார்வை  வீசிய
வண்ணம்  எனக்காகக் காத்திருந்த
மச்சான் ........///////
சந்தைக்கு நான் போகையிலே
தன் தந்தைக்கு தெரியாமல் 
மந்தையோடு மந்தையாக வண்டி
ஏறி வந்த மச்சான் ....../////
இன்று சந்தி சந்தியாக 
காத்திருக்கின்றேன்  உன்
சங்கதி சொல்ல ஆளையே
காணோம் மச்சான் ..../////
கஞ்சி குடிக்கும் காலத்திலே
இந்த வஞ்சியை சுத்தி சுத்தி 
வந்த மச்சான் ...../////
சிறுகச்  சிறுக. பணத்தைப் பார்த்த நீ
கையிலே சொத்து சேர்ந்ததும் 
கண்டுக்காமலே போனது 
ஏனோ மச்சான் ......////
கொஞ்ச நாளாக நீ மாறி 
விட்டாயே மச்சான்  இந்த
வஞ்சி மனம்  பஞ்சாய் எரிகிறது
மச்சான் .......//////
உன் பட்டணத்தின் வாழ்வின்
மாற்றம்  கண்டு  பட்டிக்காட்டு
பொண்ணு உள்ளம் தீ சுட்ட
புண்ணாக போனது மச்சான் ....///
 
  
No comments:
Post a Comment