Sunday 16 April 2023

கொண்டை முடியைச் 
சுருட்டி வைத்து 
கூடவே முந்தானையையும் 
சேர்த்து வைத்து /
கொண்டு வந்த 
சுமையை இறக்கி விட்டு 
கண்ணாடி பார்க்கையிலே ./

முகம் பார்த்த கண்ணாடி
முழுதாகக் காட்டும் முன்னே
மனம் வாடிப் போனதையா 
முகம் மலர மறுத்ததையா. 

காரணம் தான் என்ன 
காதலனே நீ சொன்ன 
வார்த்தையிலே 
நெஞ்சத்தில் சுமையேறிப் 
போனதனாலே.

பாசம் தேடிய நெஞ்சம்
பஞ்சாகப் பறக்கையிலே 
காதல் நேசம் காட்டி 
அணைத்தவனே  
நீயே தீயிட்டு எரித்தாயே
வாய் விட்டு அழ முடியலையே
நோய் தொட்டுக் கொண்டத்தையா.

ஏமாற்றம் கண்ட உள்ளம் 
வாடுதையா 
ஏதேதோ சொல்லிப் 
புலம்புதையா 
கோபமோ அனலாய்க் 
கொதிக்குதையா 
அதிலே என் மூச்சும் எரிந்து 
துடிக்குதையா .

இத்தனையும் இணைந்து 
என் ஜீபனை வதைக்குதையா.
கொந்தளிக்கும் ஆதங்கமோ -உன்னை 
வார்த்தையாலே உதைக்குதையா 
என்ன செய்து என்ன பலன் 
ஏமாற்றுத் தேரிலே 
நீ என்னை ஏற்றிய பின்னே.

ஆர் எஸ் கலா