Wednesday 21 December 2022

ஆர் எஸ் கலா குறுங்கவிதை

ஆர் எஸ் கலா குறுங்கவிதை

ஆர் எஸ் கலா குறுங்கவிதை

ஆர் எஸ் கலா குறுங்விதை

சிப்பிக்குள் முத்தெடு
***********************

விழியை உற்று நோக்கிடு /
விருப்பு நீரை ஊற்றிடு /
இதயறை தனில் நுழைந்திடு /
இரவைப் பகலாய் மாற்றிடு /
உள்ளத்தை வாங்கிடு /
உணர்ச்சியைக் கொடுத்திடு /

காதோரம் அமர்ந்திடு /
காதிலே காதல் சங்கு ஊதிடு /
ஆசை அணுக்களை உசுப்பி விடு /
இரத்த ஓட்டத்தை அதிகரித்து விடு /

உடல் எங்கும் குளிர் மூட்டி விடு /
விரல் தங்குமிடமெங்கும் சூடு ஏற்றி விடு /
அங்கமதை அளர்ந்திடு /
தங்கமென புகழ்ந்திடு /

செங்கரும்பாய் சுவைத்திடு /
செந்தேன் எனக் கதை விடு/
மச்சமதைக் கணக்கெடு /
கிச்சுகிச்சு மூட்டி சிரிக்க விடு /

நெஞ்சத்திலே மஞ்சமிடு /
சிப்பியாய் என்னை எடு /
சிப்பிக்குள் முத்தாய் தங்கிடு /
உயிராய் என்னுள் கலந்திடு /
கற்பக் குடல் நிறைத்திடு /
தாய்மை என்னும் வரத்தைக் கொடுத்திடு/

   ஆர் எஸ் கலா 
(15-8-19 எழுதியவை)
குருதி கலந்த நிலத்திலே 
குழி போட்டு /
தூய்மை நீர் என்று 
அருந்திய கூட்டம் நாங்கள் /

பட்டு மெத்தையிலே 
ஆரிரரோ பாட்டுக் கேட்டு /
தூங்கி எழுந்த கூட்டமில்லை  /

செல் ஓசையிலும் 
குண்டு மழையிலும்/
திட்டுத் திட்டான காட்டுக்குள்ளே /

குட்டிக் குட்டி 
உறக்கம் போட்டு /
எழுந்த கூட்டம் நாங்கள்   /

சிட்டுக்குருவியின் இசையிலும் /
சீறும்  நாகத்தின் அருகிலும் /

பன்றிப் பாழிலும் பதுங்கி இருந்து 
வாழ்ந்த கூட்டம் நாங்கள் /

சரசரக்கும் சாரைக்கும்
ஊளையிடும் நரிக்கும் / 
நடிங்கிடுமோ நெஞ்சம் கூறுங்கள்   /

ஆர் எஸ் கலா
உணவே மருந்து
******************

வல்லாரை துவையல் உண்டிடு /
அதிலே ஞாபக சக்தியைக் கண்டிடு /
அறுகம்புல் சார் அருந்திடு /
அதிலும் ஞாபக சக்தி உள்ளதை அறிந்திடு /

தூதுவலையை மென்றிடு/
நெஞ்சுச் சளியை வென்றிடு /
துளசிச் சாரைக் குடித்திடு /
கூடவே கற்கண்டையும் சேர்த்திடு/
லொக்கு லொக்கு இருமலைக் குறைத்திடு /
அதனுடன்   தொண்டைக் கர கரப்பை விலக்கிடு /

முடக்கத்தான் கசாயம் சுவைத்திடு /
மூட்டு வலிக்கு முற்றுப் புள்ளியிடு /
அகத்திக் கீரை பிரட்டிடு /
அதிலே வயிற்றுப் பூச்சைக் கொன்றிடு /
முருங்கைக் கீரை அரைத்தெடு /
மூச்சு அடைக்கச் செய்யும் 
ஆஸ்துமாவைத் துரத்திடு /

கிளிசறியைக் கசக்கி எடு /
முகப்பருக்களுக்கு முடிவு கட்டிடு /
கரும் சீரகம் வறுத்தெடு /
கட்டுக்கடாங்காத இனிப்பு
நோயைக் கட்டிடு /

பச்சை மஞ்சள் கிழங்கு சாப்பிடு /
இதயமதைக் காத்திடு /
வெள்ளை எள்ளு தின்றிடு /
இளைத்த உடலை மீட்டிடு /
கொள்ளைக் கொஞ்சம் சேர்த்திடு /
கொழுப்பைக் கொஞ்சம் கரைத்திடு /

காரத்தைக் கணக்காயெடு /
கோபத்தைக் குறைத்திடு /
குழம்புக் கறியை குறைத்திடு / 
வயிற்றுப் புண்ணின்  வரவைத் தடுத்திடு /
எண்ணெய் துளிகளாய் இடு /
கூடி வரும் வியாதியை களைத்திடு /

சின்ன வெங்காயத்தை அதிகம் அள்ளிடு /
நுரையீரலைக் கிள்ளும் வியாதியை தள்ளிடு /
வேம்பு குச்சு கொண்டு பல்லைத் துலக்கிடு /
சங்குப் பல்லைக் பாதுகாத்திடு /
செம்பருத்தி இலையை  
முடிக்குப் போட்டுக் குளித்திடு /
கருமையோடு நீள் கூந்தலைப் பெற்றிடு /

பூண்டு வறுத்து உண்டிடு /
வயிற்றுப் உப்பளை விரட்டிடு /
வெந்தையத்தை அதிகம் சேர்த்திடு /
அதிலே உடல் சூட்டைத்  தனித்திடு /
உப்பைக் குறைத்திடு /
இதய அடைப்பை நிறுத்திடு /

கடல் மீன்களை சுவைத்திடு /
கண் பார்வையை காத்திடு/
பச்சைக் கீரை உணவோடு சேர்த்திடு /
இரத்தத்தை அதிகரிக்கச் செய்திடு /

ஆர் எஸ் கலா (மீள்
பாண்டு வரைந்த மடல்📩
************************

சீரகச்சம்பா அரிசி குத்தி எடு /
சிதறாமல் சேதமின்றி சாதம் செய்திடு/
விடக்கோழி விரட்டிப் பிடித்து பிரட்டிடு /
வெண்டக்காய் வதக்கிடு /

ஆற்று நண்டு வறுத்தெடு /
குளத்து மீன் பொரித்திடு /
கிள்ளிய கீரையை கடைந்திடு /
வெட்டிய காயை அவித்திடு /

புடுங்கிய கிழங்கை சுட்டெடு /
காரக் குழம்பு வைத்திடு /
அதிலே கருவாடு போட்டிடு /
அப்பளமும் வைத்திடு /
மோர்மிளகாய் சேர்த்திடு /

பறித்த கனிகளை நறுக்கிடு /
சாத்துக்குடி பழம் தோலை உரித்திடு /
அதனோடு பனிக்கட்டி சேர்த்திடு /
இனிப்பையும் இணைத்திடு /

கணக்கப்பிள்ளை கையிலே கொடுத்திடு/
சரக்குப் போத்தலை உள்ளே தினித்திடு/
பீடி பையையும் வைத்திடு /
கொட்டப் பாக்கு கொழுந்து 
வெத்தைலை சுண்ணாம்போடு /
 ஏலக்காய் போட்டு மடித்திடு /

தோட்டத்து மல்லிகை எடுத்திடு/
முற்றத்து வாழைநார் வெட்டிடு/
பூக்களை சரமாய் முடித்திடு /
உன் கரும் கூந்தலில் சூடிடு/

கஞ்சியிட்ட  காஞ்சுப் பட்டு உடுத்திடு/
மஞ்சள்  போட்டு  பொட்டு வைத்திடு /
அம்சமாய் காட்சி கொடுத்திடு /
அடுத்த ஊரில் நண்பன்  வீடு/

அவனின் தங்கைக்குத்  திருமணமாம் /
நமக்கும்  குடும்பத்தோடு /
வரும் படி அழைப்பு உண்டு /
விபரமாய்  மடலைப் படித்து அறிந்திடு /
புறியாத வரிகளை மீண்டும் படித்திடு/

இப்படிக்கு உன் கணவன்  #பாண்டு /

    (28- 10-19 எழுதியவை)
பருவத்தின் நெஞ்சம் 
பார்வையில் கொஞ்சும்/
***************************
பட்டியருகே நானும் 
எட்டி நின்றாலும் /
பருவத்தின் நெஞ்சம் 
பார்வையில் கொஞ்சும்/

பருக்கள் படர்தை
அந்த வதனம்/
பூக்களை வென்ற 
வட்ட முகம்/

பளிங்கி சிலையாக
நின்ற உருவம்/
பட்டாடை உடுத்திய 
மங்கைத் துருவம் /

பழமை நடிகை 
பானுமதியின் நளினம்/
தினமும் பழகிப் பார்த்திட 
அழைக்கின்றது மனம்/

ஆர் எஸ் கலா
அடியேய் ஆடி மாசக் காத்தே
**********---********-----*******
மனசுக்குள்ள மத்தாப்பு
வாடியம்மா கந்தகப்பூ/
ஊசிப்  பார்வையை 
வீசிக்காதே தப்பு/

பொங்கும் அருவியாக
அங்கம் நனைச்சுக்கிறாய்/
மங்கிடும் மாலைப்பொழுதிலே
பங்கம் விளைவிக்கிறாய் /

பனித்துளி பட்ட 
அல்லி முகமே/
கனியிதழ் கோதிக்கும் 
கிளியாக மாத்திக்கிறாய்/

இறுக்கி புடிச்சுக்காதே
உடையோடு சேத்து/
அடியேய் ஆடிமாசக் 
காத்தே  விலகிக்கோடி /

வெடவெடத்துப் போகிறது 
சப்த நாடியடி/
தேடிக்கவா நானும் 
கம்பளிப் போர்வையடி/

ஆர் எஸ் கலா
செம்பட்டுப் பூவே
*****************
கையோடு கை
கோர்த்திட வேணாமா/
மூச்சோடு மூச்சு 
மோதிக்க வேணாம் /

வெளுப்பு மேனி 
குளத்தில் இறங்கிக்கலாமோ /
கழுத்து வரையிலும்
கெண்டைமீனும் ஊர்ந்துக்கலாமோ/

மண் தொட்டு 
வளர்ந்த கொடியினிலே/
மலர்ந்த செம்பட்டு 
சின்னப் பூவே/

நுகர்தலிலே மூச்சும்
இனிக்குதடி மானே /
நோக்கையிலே கண்ணும்
பட்டுக்குமடி பெண்ணே/

செவ்விதழால் சொல்லிக்கடி
வார்த்தை ஒண்ணு /
எந்நாளும்  தொட்டுப் 
பறிச்சுக்கலாமோடி  நானும் /

ஆர் எஸ் கலா
பாவம் அந்தப் பேதை
மனம்/
பாடுது சோக கீதம் 
தினம்/
பாசப் பிணைப்பு பிளவான 
வருத்தம்/
பாசாங்கான  பாசம் உதறியதால் 
ஏக்கம்/
பாட்டிலே கொடுக்கின்றாள் பல 
விளக்கம்/
பாவக்காய் வாழ்க்கை கொடுத்த 
தாக்கம்/
பாதியில் விட்டவனுக்கு ஏது 
துக்கம் /
பாதை மாறிய கால்களில் 
தடுமாற்றம் /
பாலமாய் உதவிட உறவில்லாத 
ஏக்கம் /
பாடையில் இப்போது அவளின் 
தூக்கம் /

(12-12-20 எழுதியவை)

ஆர் எஸ் கலா

Saturday 17 December 2022

உணவே மருந்து
******************

வல்லாரை துவையல் உண்டிடு /
அதிலே ஞாபக சக்தியைக் கண்டிடு /
அறுகம்புல் சார் அருந்திடு /
அதிலும் ஞாபக சக்தி உள்ளதை அறிந்திடு /

தூதுவலையை மென்றிடு/
நெஞ்சுச் சளியை வென்றிடு /
துளசிச் சாரைக் குடித்திடு /
கூடவே கற்கண்டையும் சேர்த்திடு/
லொக்கு லொக்கு இருமலைக் குறைத்திடு /
அதனுடன்   தொண்டைக் கர கரப்பை விலக்கிடு /

முடக்கத்தான் கசாயம் சுவைத்திடு /
மூட்டு வலிக்கு முற்றுப் புள்ளியிடு /
அகத்திக் கீரை பிரட்டிடு /
அதிலே வயிற்றுப் பூச்சைக் கொன்றிடு /
முருங்கைக் கீரை அரைத்தெடு /
மூச்சு அடைக்கச் செய்யும் 
ஆஸ்துமாவைத் துரத்திடு /

கிளிசறியைக் கசக்கி எடு /
முகப்பருக்களுக்கு முடிவு கட்டிடு /
கரும் சீரகம் வறுத்தெடு /
கட்டுக்கடாங்காத இனிப்பு
நோயைக் கட்டிடு /

பச்சை மஞ்சள் கிழங்கு சாப்பிடு /
இதயமதைக் காத்திடு /
வெள்ளை எள்ளு தின்றிடு /
இளைத்த உடலை மீட்டிடு /
கொள்ளைக் கொஞ்சம் சேர்த்திடு /
கொழுப்பைக் கொஞ்சம் கரைத்திடு /

காரத்தைக் கணக்காயெடு /
கோபத்தைக் குறைத்திடு /
குழம்புக் கறியை குறைத்திடு / 
வயிற்றுப் புண்ணின்  வரவைத் தடுத்திடு /
எண்ணெய் துளிகளாய் இடு /
கூடி வரும் வியாதியை களைத்திடு /

சின்ன வெங்காயத்தை அதிகம் அள்ளிடு /
நுரையீரலைக் கிள்ளும் வியாதியை தள்ளிடு /
வேம்பு குச்சு கொண்டு பல்லைத் துலக்கிடு /
சங்குப் பல்லைக் பாதுகாத்திடு /
செம்பருத்தி இலையை  
முடிக்குப் போட்டுக் குளித்திடு /
கருமையோடு நீள் கூந்தலைப் பெற்றிடு /

பூண்டு வறுத்து உண்டிடு /
வயிற்றுப் உப்பளை விரட்டிடு /
வெந்தையத்தை அதிகம் சேர்த்திடு /
அதிலே உடல் சூட்டைத்  தனித்திடு /
உப்பைக் குறைத்திடு /
இதய அடைப்பை நிறுத்திடு /

கடல் மீன்களை சுவைத்திடு /
கண் பார்வையை காத்திடு/
பச்சைக் கீரை உணவோடு சேர்த்திடு /
இரத்தத்தை அதிகரிக்கச் செய்திடு /

Friday 16 December 2022

பட்டிக் காட்டுப் பொன்னையா
********************************
கட்டணம் கொடுத்து 
பட்டணம் போனதில்லை/
கட்டவண்டிப் பிழைப்பு
கை விட்டதுமில்லை/

காளை மாடு ஓட்டியே
களையெடுப்பான்/
காலம் பூராவும் 
சேற்றோடு உறவாடுவான்/

உழைப்பே உயர்வென
தினம் உரைத்திடுவான் /
உடலுக்கு கோமணமே
போதும் என்பான்/

விமானிக்கும் விருந்து
வைக்கும் விவசாயி /
ஏழ்மை என்பது  எனக்கு
குறையில்லை  என்றான்/

ஆர் எஸ் கலா

Thursday 15 December 2022

பார்த்திங்களா-
மச்சான் -
பஞ்சாங்கத்தை.
*****************

இடை நோக்கிக்கும்
கொடை வள்ளலே/
கிடையாமல் நானும்
போய்க்கும் முன்னாலே/

நடையைக் கட்டிக்க
சோசியரிடம் தன்னாலே/
சோடியாக நம்மள
ஊராரும் பார்த்துப்புட்டாலே/

சோழி முடிஞ்சிருஞ்சு
கேட்டுக்கோ காதாலே/
நெஞ்சுக்குள்ள துடிக்குது
உசுரும் உன்னாலே /

நேத்தைக்கு 
சொன்னேனே
கூழாங்கலாட்டம் 
கிடந்ததுக்காம /

வேளாவேளை 
பாத்துக்கோங்க 
நன்னாள் ஒண்ணும்/

என்றேனே பார்த்திங்களா   
மச்சான் பஞ்சாங்கத்தை/
குறிச்சிக்கிட்டிங்களா  நாமும்
மாலைமாத்திக்கும் காலத்தை /

ஆர் எஸ் கலா
சின்னப்பூவே மெல்லப்பேசு
*****************************

மல்லிகைப்பூ வசியக்காரியே
மகிழம்பூ பாசக்காரியே/
அல்லிப்பூ கெண்டைக்காரியே
ஆலம்பூ கொண்டைக்காரியே/

வாழைப்பூ இடையழகியே
தாழம்பூ சடையழகியே/
தென்னம்பூ பல்லழகியே 
மிளகாய்ப்பூ சொல்லழகியே/

சங்குப்பூ கழுத்தழகியே
சாமந்திப்பூ சிரிப்பழகியே/
ஊர்க்குருவி கண்ணழகியே
உள்நாக்கின் நெல்லிக்கனியே/

தேக்கம்பூ வாக்குக்காரியே
தெவட்டாத பாட்டுக்காரியே/
கொடிமுல்லைப்பூ நளினக்காரியே
புளியம்பூ முறைப்புக்காரியே/

கொவ்வை இதழில்
தேனாகா மொழியெடுத்து/
தானாக நெருங்கி
சின்னப்பூவே நீ மெல்லப்பேசடி/

ஆர் எஸ் கலா
மீட்டாத வீணைகள்
**********************
மொட்டிலே சருகாகிறது
இளம்பிறை ஒன்று/

கற்கலோடு தேய்கிறது 
பொற்கரங்கள் இரண்டு /

ஏழ்மையோ ஆசைகளை
அறுத்து விட்டது/

தாழ்த்தப்பட்ட வாழ்வோ
அணைத்துக் கொண்டது/

இன்ப நாதம் 
இணைந்திடாத கருவி /

துன்பக் கீதம் 
அமைக்கின்றது கண்ணீரில்/

உள்ளத்து ஆசைகளை
எள்ளளவும் 
மீட்டாத வீணைகள் /

ஆர் எஸ் கலா
எண்ணமெல்லாம் நீயாய்😭
******************************
பெற்ற அன்னை மனம் 
பதறுதடா/
உயிரற்ற உடலாய் உலகில் 
உலாவுதடா/
திரையுரிவில் உன்னைப் பார்த்து மெழுகானதடா/

எதிர் பார்த்திடும் மனமோ 
ஏங்குதடா /
நீ இல்லையென்பதை ஏற்றிட 
மறுக்குதடா/
பாலூட்டிய தாயுள்ளம் பதறியே 
கலங்குதடா /

என் மடியேற்றிய சுடர்க்கொடி
 நீயடா/
விழி மூடி சுடரணைத்தாய் 
ஏனடா/
எண்ணமெல்லாம் நீயாய் இருளோடு வாழ்க்கையடா/

ஆர் எஸ் கலா
உள்ளமே உனக்குத்தான்
***************************
நூல் இடை 
உனக்காகவே ஏங்கையிலே/
மேலாடை உனக்கென 
தானாக விலகையிலே/

பாலாடை மேனியிலே
பூவாடை வீசையிலே/
கூடிடும் இரவுகளை
விழிகளும் தேடையிலே/

சட்டன எழுந்திடும் 
நாணம் சஞ்சலமாகிடனும்/
பஞ்சணை ராத்திரியை
நெஞ்சணையாய் மாற்றிடனும்/

கொஞ்சும் புறாவோடு
கொஞ்சி விளையாடிடனும்/
என்றெல்லாம் கற்பனையில்
நான் மிதக்கையிலே/

உறவுகளின் சொற்பொழி
இதயத்தினுள்   நுழைந்திடுமோ/
எந்நாளும் என்னவளே
உள்ளமே உனக்குத்தானடி/ 

ஆர் எஸ் கலா
சித்திரம் பேசுதடி
*******************

தாமரைப்பூ வண்ணத்தில்
வதனம் கொண்டவள் /
கருவண்டு உருவில்
விழிகள் அமைந்தவள்/

தேன் கிண்ணம்
இதழ்கள்  சுமப்பவள் /
தெவிட்டாத அழகினை 
திரட்டி எடுத்தவள் /

சித்திரம் பேசுதடி 
உற்று நோக்கையிலே /
கற்றுத் தந்தாள் 
ஆயிரம் கவிதைகளடி/

ஆர் எஸ் கலா
பிரிந்தாவனத்தில் 
பூவெடுத்து .
***********************
பிரியத்தை நெஞ்சைப் 
பிளந்து  காட்டிடவா /
பிரியமானவளே பிரிந்தாவனத்தில் 
பூவெடுத்து  வச்சிக்கவா /

சந்தேகப் படர்கொடியை 
அடியோடு அறுத்தெறிந்திடு/
சங்கொலியாய் சிரித்து 
நெஞ்சோடு சங்கமமாகிடு/

பிரித்திட முடியாமல்  
பாலோடு நீராகிடுவோம் /
சரித்திரக் காதலாய் 
மாற்றிடப் போறாடிடுவோம்/

சந்தோச உலகமே 
எந்நாளும்  நீயேதானம்மா /
சத்தியமாய் முடியாது
பிரிவைத் தாங்கம்மா/

உத்தரவாதம் கொடுக்கின்றேன் 
என்னுள்ளே சரிபாதியென /
உத்தமனாய் வாழ்ந்திடுவேன் 
உனக்காகவே நானென/

ஆர் எஸ் கலா
துள்ளி வரும் இளமானே
***************************
மெழுகுச் சிலையா
கொலு பொம்மையா / 
துள்ளி வரும் 
இளமானோ கொல்லுதையா/

கள்ளியின் கன்னம் 
மல்லிப்பூ வண்ணம் /
பள்ளியறையிலே
கொடுத்திடுவேன் 
முத்தச் சின்னம்/ 

வாம்மா வள்ளியென
கூதலுடலும் 
அழைக்கின்றதே/
அல்லித்தண்டு கால்களைக்
கொஞ்சிடும் கொலுசும்/

கண்ணைக் கிள்ளி 
நெஞ்சை நொள்ளி/
நகர்கிறது காதிலே
காதலைச் சொல்லி/

வில்விழிகளால் தெறிக்க
விட்டேன் அம்புகளை/
பிடித்துக் கொண்டன
புள்ளிமான் ஒன்றை/

ஆர் எஸ் கலா

Thursday 24 November 2022

சோளக்கதிரு வெளஞ்சிருக்கு 
சோடிக்கிளி காத்திருக்கு.
**-***************************

கிழக்கால உதிச்சிக்கும் 
சூரியன் என்னாலும் /
மேக்கால மறஞ்சிக்கப்
போகுது தன்னால /

ஒங்களுக்கு  இப்பாக்கும்
புரியலயே யென்நில/
மஞ்சள் குளிச்சி 
நானும் மாசங்களாச்சி /

குலவ போட்டவங்க 
பல்லும் கொட்டியாச்சி/
கொழுந்தனார் பொண்டாட்டிக்கும்
மாசமோ பத்தாச்சி/

மூத்தார் புள்ள 
நோக்கு என்னாச்சி/
நேக்கு காத்திருந்து
தேயுது மூச்சி /

கண்ணாலம் முன்னாக்க
யேனாக்கும் மூஞ்சு  கடுப்பாச்சி/
காலத்தால கவலையிலே
கஞ்சியும் சிக்கிடிச்சி/

வெளஞ்ச சோலக்கதிரும் 
சந்தைக்குப் போயாச்சி/
காத்திருக்கும் சோடிக்கிளிக்கு
வாழ்க்கையே நாசமாச்சி/

   ஆர் எஸ் கலா

Wednesday 23 November 2022

பேசும் சிலையே
**--**************
ஏந்திழையாள் சிற்றிடையில் 
சிறு  பொற்குடமோ /
செதுக்கிய சிற்பிக்கு 
ஏற்றிடலாம் மகுடமே/

நகராத பாதங்கள் 
நகர்த்துகின்றது கற்பனைகளை/
கடல் மலை 
தாண்டி வெகுதூரம் /

இமைத்திடாத விழிகளும் 
அசைந்திடாத கரங்களும்/
அசைத்துப் பார்க்கின்றது
அசராதவன் நெஞ்சத்தை/

மூச்சும் பேச்சும் 
கிடைத்திடாப் பெண்ணாயிருந்து  /
ஆயிரம் கவிதைகள் படைத்திடும்
கவிஞன் ஆக்கினாள் என்னை/

பேசும் சிலையே நீயும்
ஆசைகளை மௌனமாகவே/
நோக்கிய நொடியே
தேக்கி  விட்டாயடி/

ஆர் எஸ் கலா
மாமா நான் மயங்குறேன்
****************************
மல்லு வேட்டி  ராசாவே
மல்லுக்கட்டிக்காதே/
பல்லு கொட்டிப்புடும் 
ஒன்னு விட்டாலே /

நேக்குப் புடிக்கல
அவ சகவாசம் /
சொன்னாக்கா கேட்டுக்கோ
சிக்கிக்காதே கைவசம் /

கறந்தபாலாக
நெனைச்சுக்காதே அது விசம் /
புலம்பிக்கும் என்னைய
பாருங்களேன் ஒரு நிமிசம் /

ஆளான காலமாய் 
நூலாக போறேன் /
அகண்ட மார்புல
மாலையா வாறேன் /

சிறுக்கி நானும் 
மாமா மயங்குகிறேனே/
திரும்பி நோக்கிக்காம 
போய்கிறேயே ஏனோ/

ஆர் எஸ் கலா