குருதி கலந்த நிலத்திலே
குழி போட்டு /
தூய்மை நீர் என்று
அருந்திய கூட்டம் நாங்கள் /
பட்டு மெத்தையிலே
ஆரிரரோ பாட்டுக் கேட்டு /
தூங்கி எழுந்த கூட்டமில்லை /
செல் ஓசையிலும்
குண்டு மழையிலும்/
திட்டுத் திட்டான காட்டுக்குள்ளே /
குட்டிக் குட்டி
உறக்கம் போட்டு /
எழுந்த கூட்டம் நாங்கள் /
சிட்டுக்குருவியின் இசையிலும் /
சீறும் நாகத்தின் அருகிலும் /
பன்றிப் பாழிலும் பதுங்கி இருந்து
வாழ்ந்த கூட்டம் நாங்கள் /
சரசரக்கும் சாரைக்கும்
ஊளையிடும் நரிக்கும் /
நடிங்கிடுமோ நெஞ்சம் கூறுங்கள் /
No comments:
Post a Comment