Wednesday 21 December 2022

குருதி கலந்த நிலத்திலே 
குழி போட்டு /
தூய்மை நீர் என்று 
அருந்திய கூட்டம் நாங்கள் /

பட்டு மெத்தையிலே 
ஆரிரரோ பாட்டுக் கேட்டு /
தூங்கி எழுந்த கூட்டமில்லை  /

செல் ஓசையிலும் 
குண்டு மழையிலும்/
திட்டுத் திட்டான காட்டுக்குள்ளே /

குட்டிக் குட்டி 
உறக்கம் போட்டு /
எழுந்த கூட்டம் நாங்கள்   /

சிட்டுக்குருவியின் இசையிலும் /
சீறும்  நாகத்தின் அருகிலும் /

பன்றிப் பாழிலும் பதுங்கி இருந்து 
வாழ்ந்த கூட்டம் நாங்கள் /

சரசரக்கும் சாரைக்கும்
ஊளையிடும் நரிக்கும் / 
நடிங்கிடுமோ நெஞ்சம் கூறுங்கள்   /

ஆர் எஸ் கலா

No comments:

Post a Comment