அரிதாரம் பூசாத வேசம்/
ஆனாலும் நன்றாகவே
நடிக்கின்றேன் ../
என் உள்ளே ஆயிரம்
கவலைகளைச் சுமக்கின்றேன் /
உலக வாழ்க்கையிலே நானும்
மனிதனாக நடை போடுகின்றேன் ./
தடைகளை தாண்டத் துடிக்கின்றேன் /
இருந்தும் பல. இடையூறுகளை
சந்திக்கின்றேன் /
அனை உடைத்தே பெருக்கெடுக்கும் /
விழி நீரைத் துடைத்து விட்டு நடைபோடுகின்றேன் /
உண்மை அன்பைத் தேடி ஓடுகின்றேன் /
ஏமாற்றத்தைப் பரிசாக. அள்ளி விடுகின்றேன் /
வலிகள் தாங்கித் தாங்கி /
இதயம் வலிமை பெற்று விட்டதாக
உணர்கின்றேன் /
உள்ளம் வலு இழந்து வருவதையும் /
புரிந்து கொள்கின்றேன்/
இறைவனுக்கு என்ன. கோபமோ ?
வகுத்து விடுகின்றான் /
ஒரு தண்டனையை பிறக்கும் போதே /
இந்த பொல்லாத உலகில் /
தினம் தினம் தண்டனையை
அனுபவித்த. படியே வாழ வேண்டும் /
என்பதற்காகவே வாழ்கின்றேன் ./
உயிர் துறக்கவும் துணிவு வேண்டும்/ துணிவோ கரம் கொடுக்கவில்லை /
அதனாலே உயிரைச் சுமந்து வாழ்கின்றேன்/
துணை இன்றி நான் இல்லை /
எப்போதும் துணையாக. கை
கொடுக்கின்றது துயரம் /
இன்பம் எள் அளவு / துன்பம் கடலை அளவு /
விதையிட்டுப் பார்த்தால் /
மனதிலே நிறைந்து விட்டது துன்பம் /
இடம் இல்லை இன்பத்துக்கு ./
இருந்தும் இன்பத்தையும்
பயிர் இட்டதாக எண்ணிச் சிரிக்கின்றேன் /
போலி நடை முறைக்கும் /
படிப்புக்கும் பணத்துக்கும் முன்னே /அன்புக்கு வேலையில்லை ./
அன்பைத் தவிர எண்ணிடம் வேறு இல்லை /
போலியான குணம் என்னில் அமரவில்லை./
தலை முடியின் கீழே இறைவன்
போட்டான் ஒரு கோலம் /
அதை அவனே அழித்தால் உண்டு /
அழிக்கும் வழி என்னிடம் இல்லை /
அதற்காகவே நான் கொடுக்கின்றேன் /
கண்ணீர்த் துளிகளை பரிசாக. தினம் தோறும் /
காரணம் இல்லாமல் வெறுக்கப்பட்டேன் /
ஆசை வார்த்தை இன்றி ஒதுக்கப் பட்டேன் /
அவன் வாங்க மறுத்தாலும் /
நான் கொடுத்துக் கொண்டே தான் /
இருக்கின்றேன் நிறுத்தாமலே./
வாழ்த்துக்களை மனதினிலே /
பூக்களாய் தூவியபடி ஓசை இல்லாமலே /