Friday 7 December 2018

விடை பெறுகின்றேன்

கலைந்த கூந்தல்
கலைந்த படியே /
சேர்த்து முடிக்க
கரம் நினைக்கலையே/

மனதில் எழுந்த ஆசை
மரணிக்கும் வேளையிலே /
மறந்தும் சிரிப்பு தோனலையே /

பிரிவு என்ற ஒன்று
பிரியாவிடை கேட்டதே /
பிரியங்கள் இப்போது
மரண வாசலிலே /

ஆழ்ந்த அன்பு அடுத்த
பாதையில் பயணிக்கவே /
போதையில்
மூழ்கிய விழிகள் இரண்டும் /
ஆழ் கடலை
அதற்குள் அழைக்கின்றதே/

வந்த உறவு
சொந்தமில்லை /
சென்ற பின்னே
உரிமையில்லை /

வேதனையைச்
சொல்லி அழுத பின்னே/
விடை கொடுக்காமல்
விட்டால் பாசமில்லை /

நேசத்தால் விளைந்த முல்லை /
நேற்றோடு முடிந்த கதை /
காற்றோடு கரைந்த நிலை /
தேற்றிக் கொள் உன் மனதை /

தித்திப்பு மூட்டிய சொற்கள் /
திகைப்பூட்டிப் போனது புதுக்கதை/
மத்தாப்பு சிரிப்பு எல்லாம்
புதையுண்டு போனது பெரும் கதை /

No comments:

Post a Comment