Saturday 29 December 2018

காதலடா

நெஞ்சோடு கலந்த
உன்னை  நஞ்சோடு
பால் அருந்தினாலும்
மறக்க முடியுமா ?

உயிரோடு
கலந்த உன்னை
உதறிய பின்னும்
வெறுக்க முடியுமா?

மஞ்சத்திலே கொஞ்சிட
நினைத்த உன்னை
பஞ்சோடு போட்டு 
எரித்தாலும்
பிரிக்கத் தான் முடியுமா?

உள்ளத்தால் வாழ்ந்தேன்
நீ உதட்டோடு
முடித்துக் கொண்டாய்
உயிரற்றுப் போனது என் காதலடா?

   

No comments:

Post a Comment