நான் தமிழச்சி /
உன்னை விரட்டி அடிப்பேன்
தமிழை வச்சி/
இன்பத் தமிழுக்காகவே
துன்பம் கண்ட கருவாச்சி/
கரங்களிலே இல்லை
ஐயனார் அருவாச்சி /
மையினால் உருவான
(பென.தான் ) எழுத்தாணியே ஆட்சி /
மேகத்தைப் பிடித்து/
மெத்தையிடத் துடிக்கும்
என் கற்பனை ஆட்சி /
புதிய. கோணத்திலும்
தமிழைப் போற்ற எடுப்பதே முயற்சி/
பொய்யான முகத் திரையை
கிழித்துப் போட தயங்காது
என் மனசாட்சி./
குறுக்குப் பாதையிலே
வண்டி ஓட்டாதே /
என் எதிரே வந்து வாலை ஆட்டு /
அரளிச் செடியிலும் /
தேனோடு மலர் உண்டு /
கள்ளிச் செடியிலும்
இனிப்போடு கனி உண்டு /
தமிழுக்கு தமிழந் தான் எதிரியாம் /
இது தொண்று தொட்டு
பேசப்படும் வாய் மொழியாம் ./
எதிர்ப்போரை வீழ்த்தி எழுவது தான் எழில்சி /
அதற்குத் தேவையில்லை புரட்சி/
No comments:
Post a Comment