Friday 14 December 2018

வாழ்த்துக்கவிதை


பல்லாண்டு வாழ்க /
16  செல்வங்களையும்
பெற்று வாழ்க /
நல்லதை நினைத்து வாழ்க./
.தீயதை விடுத்து வாழ்க /

நன்மை புரிந்து வாழ்க../
கெடுதலை ஒதுக்கி வாழ்க/
இன்பமாய் வாழ்க./
துன்பம் மறந்து வாழ்க/

சிந்தனை வளர்த்து வாழ்க/
.சிகரம் தொட்டு வாழ்க/
சிறப்பாய் வாழ்க./சிரித்து வாழ்க/
அன்போடு வாழ்க./

அறிவின் துணையோடு வாழ்க/
ஆசையை சுமந்து வாழ்க./
நிராசையை தவிர்த்து வாழ்க/
ஏமாற்றத்தை ஏற்று வாழ்க/

வெற்றியைத் தேடிப் பிடித்து வாழ்க/
நட்பை மதித்து வாழ்க /
.உறவை நினைத்து வாழ்க/
பெற்றோரை சேர்த்து வாழ்க/

இறை பக்தியுடன் வாழ்க/
சாதிக்கும் துணிவுடன் வாழ்க/
.சாதனை பல புரிந்து வாழ்க/
சோதனையை ஏற்று வாழ்க/

வேதனையை மறந்து வாழ்க/
வாழ்க வளர்க நீடூழி வாழ்க /
எல்லோரின் இதயத்திலும்/
மலராய்   மலர்க இன்று போல் /
என்றும்  இன்பமாக வாழ்க/

என்  அன்பான
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
அன்பு நண்பா..{ச.துரை)

No comments:

Post a Comment