Wednesday 5 December 2018

என் செல்லமே

உன் கரம் தொட்டு./
நான் நாணம் விட்டு./
நம்மோட மூச்சுக் காற்று /
ஒன்றோடு ஒன்று முட்டி./

என்னோட உடல் சூடு பட்டு /
உன் தேகம் வியர்வை கொட்டி./
இரு தேகத்து வியர்வையும்
முத்தமிட்டு./

இதயத் துடிப்பு அதிகரித்து /
ஓடும் குருதியின்
ஓட்டம் அதிகரித்து /
களைந்த உடையை சரி பார்த்து /
களைப்பாறும் வேளையிலே/

எட்டி எட்டி போனவளை;
நீ  தொட்டு இழுத்து /
கட்டியணைத்து. /
சுவைத்த இதழில் தடம் பார்த்து /
தடவிக் கொடுத்து./

நீ  செல்ல மொழி பேசி/
வளைந்து நெளிந்து /
சுகம் கண்ட கதை தனை
சொல்லி நகைத்து./

இரண்டோடு
ஒன்று வரும் ;
காலம் எப்போது ?
என் செல்லமே./

No comments:

Post a Comment