அரிதாரம் பூசாத வேசம்
ஆனாலும் நன்றாகவே
நடிக்கின்றேன் .....///
என் உள்ளே ஆயிரம்
கவலைகளை சுமக்கின்றேன்
உலக வாழ்க்கையிலே
நானும் மனிதனாக
நடை போடுகின்றேன் .....////
தடைகளை தாண்ட
துடிக்கின்றேன்
இருந்தும் பல
இடையூறுகளை
சந்திக்கின்றேன் .....////
அனை உடைத்தே
பெருக்கெடுக்கும்
விழி நீரை துடைத்து
விட்டு நடைபோடுகின்றேன் ....///
உண்மை அன்பை
தேடி ஓடுகின்றேன்
ஏமாற்றத்தைப் பரிசாக
அள்ளி விடுகின்றேன் .......////
வலிகள் தாங்கி தாங்கி
இதயம் வலிமை பெற்று
விட்டதாக உணர்கின்றேன்
உள்ளம் வலு இழந்து
வருவதையும் புரிந்து
கொள்கின்றேன் .......///////
இறைவனுக்கு என்ன
கோபமோ வகுத்து
விடுகின்றான்
ஒரு தண்டனையை
பிறக்கும் போதே ...../////
இந்த பொல்லாத
உலகில் தினம் தினம்
தண்டனையை அனுபவித்த
படியே வாழ வேண்டும்
என்பதற்காகவே
வாழ்கின்றேன் ........////
உயிர் துறக்கவும் துணிவு
வேண்டும் துணிவோ கரம்
கொடுக்கவில்லை
அதனாலே உயிரை சுமந்து
வாழ்கின்றேன் .......////
துணை இன்றி
நான் இல்லை
எப்போதும் துணையாக
கை கொடுக்கின்றது துயரம் ....../////
இன்பம் எள் அளவு
துன்பம் கடலை அளவு
விதையிட்டு பார்த்தால்
மனதிலே நிறைந்து
விட்டது துன்பம்
இடம் இல்லை இன்பத்துக்கு ......////
இருந்தும் இன்பத்தையும்
பயிர் இட்டதாக எண்ணி
சிரிக்கின்றேன் ..........//////
போலி நடை முறைக்கும்
படிப்புக்கும் பணத்துக்கும்
முன்னே அன்புக்கு
வேலையில்லை ....../////
அன்பை தவிர எண்ணிடம்
வேறு இல்லை
போலியான குணம்
என்னிடம் அமரவில்லை......./////
தலை முடியின் கீழே இறைவன்
போட்டான் ஒரு கோலம்
அதை அவனே அழித்தால்
உண்டு அழிக்கும் வழி
என்னிடம் இல்லை .....//////
அதற்காகவே நான்
கொடுக்கின்றேன்
கண்ணீர் துளிகளை பரிசாக
தினம் தோறும் ,......////
காரணம் இல்லாமல்
வெறுக்கப்பட்டேன்
ஆசை வார்த்தை இன்றி
ஒதுக்கப் பட்டேன் .../
அவன் வாங்க மறுத்தாலும்
நான் கொடுத்துக் கொண்டே தான்
இருக்கின்றேன் நிறுத்தாமலே.
வாழ்த்துக்களை மனதினிலே
பூக்களாய் தூவியபடி ஓசை
இல்லாமலே .../////