முடியப் போகும் இந்த வருடம்
கொடுத்தது பல
புது அனுபவங்களை....///
முடியாது என்ற சொல்லை
நான் என்றும் வரவேற்றதில்லை.
முயற்சி என்ற ஒன்றை
நான் கை விட்டதுமில்லை. ....//
அதனால் கிடைக்கப் பெற்றேன்
சில இன்பங்களை.
எதிர் கொண்டேன் இன்னல்களை.
சுமந்து கொண்டேன் கவலைகளை.
ஏந்தி நின்றேன் வலிகளை....////
இருந்தும் என் போக்கையும்
குணத்தையும் மாற்றும்
நோக்கம் எனக்கில்லை...////
ஆண்டுதான் மாண்டு விடுகிறது
ஆண்டவன் மாண்டதில்லை.
முயற்சி தான் தோல்வியில் முடிகிறது
முயற்சிக்கும் மனம் மரணிக்கவில்லை....///
எதையும் தாங்கும் இதயம்
துடிப்பை நிறுத்தவில்லை.
எதையும் எதிர் கொள்ளும்
நெஞ்சம் மாய்ந்து விடவும் வில்லை..../////
தூத்துவோரையும் முன் விட்டு பின்
அவதூறு பேசுவோரையும்
கண்டு அஞ்சப்போவதுமில்லை.
என் உள்ளம் கவர்ந்தவர்களை
கெஞ்சுவதிலிருந்து பின்
வாங்கப்போவதுமில்லை....////
நான் மனக்கும் முல்லையுமில்லை.
எரிக்கும் தீப்பொறியுமில்லை .
சிரித்துப் பேசி சிறப்புடன்
வாழ ஏங்கும் வெகுளிப் பிள்ளை.....////
No comments:
Post a Comment