மாதத்தில் இறுதி மாதம்
மழை மேகம் கொட்டித்தீர்க்கும் ஆண்டு
அழகு மலரெல்லாம் பூத்துக்
குளுங்க மறுக்காத மாதம் .....///
சுடுபட்ட மணல் ஆதவனிடமிருந்து
விடுதலை பெறும் மாதம்
விண் இருந்து மண் வரைக்கும்
குளிரால் சூழப்படும் மாதம் .....///
குதுகலமாக பிறக்கின்றது
கிருஸ்த்துமஸ் விண் உலகை விட்டு
மண் உலுக்கு தேவன் இறங்கி வருகிறான்
விண்ணுக்கும் மண்ணுக்கும் உள்ள ஒற்றுமை
கண்டு மகிழும் மாதம்....////
உருகிடும் மெழுகினாலே
மனம் கரைந்து மகிழ்கிறான்
தேவாலயத்திலே மக்கள்
வெள்ளம் கண்டு இதயத்திலே
நுழைந்து அவன் அமரும் மாதம்..///
அன்னையென மாதா வருகிறாள்
அரவணைத்துப் பிள்ளைக்கு
ஆசி கூறி மறைகிறாள் .....////
ஜேசுவின் நாமம் தொழும் மனிதர்களுக்கும்
நல் மனம் கொண்டவனுக்கும் ஆசி புரியும் மாதம் .......////
பாவத்துக்குள் புதையுண்ட
ஜெம்மங்களை ஓரம் கட்டிச் செல்கிறான் ..
தட்டினால் திறக்கும் தேடினால் கிடைக்கும்
இது கிருஸ்தவரின் தாரகை மந்திரம்
இதை தவறாது அனைவரும் உச்சரிக்கும் மாதம்./////
இவை உலகில் அனைத்து மதங்களுக்கும் பொருந்தும்
தேடலிலேதான் வெற்றி உண்டு என்று
வழியுறுத்துகின்றது மதங்கள் என்றும்
இதை புரிந்து நடந்தால் மதம் ஒரு புரட்டு இல்லை
இறைவனும் கருவறை கொடுக்கும் அன்னையும் ஒன்றே .
இரண்டுமே மாறாது என்றுமே என்று உறுதியாய் நம்பு
மதம் பார்த்து இனம் பிரிக்காது
மனிதம் பார்த்து இணைந்து வாழ முந்து
என்று நான் உணர்த்தும் மாதம் மார்கழி மாதம்...////
No comments:
Post a Comment