Saturday 24 December 2016

மார்கழி மாதம்

மாதத்தில் இறுதி  மாதம்  
மழை மேகம்  கொட்டித்தீர்க்கும் ஆண்டு 
அழகு மலரெல்லாம் பூத்துக்
குளுங்க மறுக்காத மாதம்  .....///

சுடுபட்ட மணல் ஆதவனிடமிருந்து
விடுதலை பெறும் மாதம்
விண் இருந்து மண் வரைக்கும்
குளிரால் சூழப்படும்  மாதம்  .....///

குதுகலமாக பிறக்கின்றது
கிருஸ்த்துமஸ்   விண் உலகை விட்டு
மண் உலுக்கு  தேவன் இறங்கி  வருகிறான்
விண்ணுக்கும் மண்ணுக்கும் உள்ள ஒற்றுமை
கண்டு மகிழும்  மாதம்....////

உருகிடும் மெழுகினாலே
மனம் கரைந்து மகிழ்கிறான் 
தேவாலயத்திலே மக்கள்
வெள்ளம் கண்டு இதயத்திலே
நுழைந்து அவன்  அமரும்  மாதம்..///

அன்னையென மாதா வருகிறாள்
அரவணைத்துப்   பிள்ளைக்கு
ஆசி கூறி மறைகிறாள் .....////
ஜேசுவின் நாமம் தொழும் மனிதர்களுக்கும்
நல் மனம் கொண்டவனுக்கும்   ஆசி புரியும் மாதம் .......////

பாவத்துக்குள் புதையுண்ட
ஜெம்மங்களை  ஓரம் கட்டிச் செல்கிறான் ..
தட்டினால் திறக்கும் தேடினால் கிடைக்கும் 
இது கிருஸ்தவரின் தாரகை மந்திரம்
இதை தவறாது அனைவரும் உச்சரிக்கும்  மாதம்./////

இவை உலகில் அனைத்து மதங்களுக்கும்  பொருந்தும் 
தேடலிலேதான் வெற்றி  உண்டு என்று
வழியுறுத்துகின்றது  மதங்கள்  என்றும் 
இதை புரிந்து  நடந்தால் மதம் ஒரு புரட்டு இல்லை
இறைவனும் கருவறை கொடுக்கும்  அன்னையும் ஒன்றே .
இரண்டுமே மாறாது என்றுமே  என்று உறுதியாய் நம்பு
மதம் பார்த்து  இனம் பிரிக்காது 
மனிதம்  பார்த்து இணைந்து வாழ முந்து
என்று நான் உணர்த்தும் மாதம் மார்கழி மாதம்...////

      

No comments:

Post a Comment