Saturday 31 December 2016

மௌனம்

நெடு நாளாக மௌனம்
இருக்கும் திறமையை
உன்னிடம் தான் கண்டு
கொண்டேன் ....../////

மௌனத்தால் அமைதி
கிடைக்குமா என்ற கேள்வியும்
உன்னை பார்த்த பின்புதான்
பிறக்கின்றது ......///

மௌனமாக இருக்க ஒரு
தனி திறன் வேண்டும்
அதை உன்னிடம் கண்டு
வியர்ந்து நின்றேன் ...../////

மௌனத்தால் மனம்
நிறைந்த வலியை பிறருக்கு
கொடுக்க முடியும் என்று
உணர்த்தியவனும் எனக்கு
நீயே நீயே தான் ..../////

எப்போதும் போல் இன்றும்
உன் மௌனம்  வென்று
விட்டது என் இன்பத்தை
தின்று விட்டது ....../////

உன் மொழி பறந்து வரவில்லை
என் விழி கலங்கி விட்டது
புதுவருடப்  பரிசாக உன்
பிடிவாதம்  என்  விழி நீரை இன்று
பெற்று விட்டது ...../////

என்றும் போல் இன்றும்
செய்தி பெட்டி செத்து விட்டது
போட்ட செய்தி தங்கி விட்டது ...../////

No comments:

Post a Comment