Sunday, 1 January 2017

நீயும் ஒரு கவிஞனே

சுழண்டு வீசும் காற்று
மரத்தை உசுப்பி
விளையாடுகிறது
வலிமை இழந்த மரம்
காற்றின் வீரியம்  தாங்காது
உடைந்து விழுகிறது .....///////

இதை உற்று நோக்கும்
ஒருத்தனின் மனதிலே
சிறு கற்பனை பிறக்கிறது....///

குடிகாரனின் கரங்களிலே
சிக்கிய மனைவின் தலை
முடிபோல் ஆனதே
இந்த மரத்தின் நிலை  என்று
அதை கவியாக கொடுக்க
சிறு மாற்றம்  கொடுத்து
அவன் எழுதினால் அவை
தான் கவிதையாகிறது...../////

வன்மம் கொண்ட குடிகாரனின் 
கரங்களிலே தன் மானம் கொண்ட
மனைவியின் கருங்கூந்தல் சிக்கியது 
போன்று சீற்றம் கொண்ட வாயுதேவனின்
பிடியிலே வேம்பின் கிளைகள்  சிக்கியது .....//////

இதமாக வீசிய காற்றையும்
தென்னங் கீற்றையும்
உற்று நோக்கினான் உடன்
அவன்  கற்பனை சிறு  கவி தீட்டியது..///

மெதுவாக. நுழையும் காற்று
என்ன கூற்றை கூறிவிட்டதோ
நாணம்  கொண்ட பெண்ணைப் போல்
தென்னங்கீற்று வளைந்து நெளிந்து
மெதுவாக வெட்கம் கொண்டு
தலையை  அசைக்கின்றது .....////

அதை நாமும் பார்ப்போம்
நம் கண்ணுக்கோ  தென் படுவது
தென்னங்கீற்று  அசைவது தான்
ஓ -- அது காற்றுக்கு ஆடுது
நாம் நடையைக் கட்டி விடுவோம்
ஆனால் ஒரு கவி உணர்வு உள்ளவன்
விழி அதை நோக்கினால் பல மொழியில்
பல கவி பிறது விடும் ...////

தூணிலும் இருப்பான்
துரும்பிலும் இருப்பான்
இறைவன் என்பார்கள்
அந்த தூணில் ஒட்டி
இருக்கும் தூசியிலும்
கவி பிடிப்பான் அதை
பா வடிப்பான் திறமை
உள்ள ஒரு கவிஞன்  ...//

அது நீயாகவும் இருக்கலாம் நாளை
முயற்சியே வெற்றியின் மலர்ச்சோலை
முயன்று பார் மனிதனே இயற்றிப்  பார்
நீயும் கவிஞனாகலாம்.

  

No comments:

Post a Comment