Monday, 16 January 2017

தீ


எப்பொருளாயினும்
அப்பொருள்
அவியத் தேவை   - தீ.

பாரதப் போரின்
போது இறுதியில்
தென்படுபவை  - தீ.

குமுறும் எரிமலையில்
இருந்து எழுவது  - தீ.

மூங்கில்  காட்டிலே
தூங்கிகக் கொண்டு
இருப்பவை  - தீ.

கதிரவன்  அனலும்
ஒரு வைகையில்  - தீ.

ஏழு கடலில் ஓர்
கடலில் குளிப்பது   - தீ.

சிவனோட மூன்றாங்
கண்ணில் இருந்து
வெளியாவதும்  - தீ.

கத்தரி வெயிலுக்கு
மறு பெயர்  - தீ.

பிரமிக்க வைக்கும்
அழகான. உடலை ஒரு பிடி
சாம்பலாக்குவதும் - தீ.

சத்தத்துடன்
உயிரைப் பறிக்கும்
தோட்டாவில்
இருப்பவையும் - தீ. 

நெற்றிக் கண்
திறந்து அநீதியை
அழிப்பவையும் - தீ.

தீண்டுவோரை சுட்டு
விடுபவையும் -தீ.

தீபச்சுடரிலே தீபமாக
நின்று எரிந்து
காட்சி தருபவையும் - தீயே தீ .

       

No comments:

Post a Comment