எப்பொருளாயினும்
அப்பொருள்
அவியத் தேவை - தீ.
பாரதப் போரின்
போது இறுதியில்
தென்படுபவை - தீ.
குமுறும் எரிமலையில்
இருந்து எழுவது - தீ.
மூங்கில் காட்டிலே
தூங்கிகக் கொண்டு
இருப்பவை - தீ.
கதிரவன் அனலும்
ஒரு வைகையில் - தீ.
ஏழு கடலில் ஓர்
கடலில் குளிப்பது - தீ.
சிவனோட மூன்றாங்
கண்ணில் இருந்து
வெளியாவதும் - தீ.
கத்தரி வெயிலுக்கு
மறு பெயர் - தீ.
பிரமிக்க வைக்கும்
அழகான. உடலை ஒரு பிடி
சாம்பலாக்குவதும் - தீ.
சத்தத்துடன்
உயிரைப் பறிக்கும்
தோட்டாவில்
இருப்பவையும் - தீ.
நெற்றிக் கண்
திறந்து அநீதியை
அழிப்பவையும் - தீ.
தீண்டுவோரை சுட்டு
விடுபவையும் -தீ.
தீபச்சுடரிலே தீபமாக
நின்று எரிந்து
காட்சி தருபவையும் - தீயே தீ .
No comments:
Post a Comment