Friday, 13 January 2017

பொங்கல் வாழ்த்துக்கள்

புது நாத்து  .
புது நெல்லு  .
புதுப் பானை  எடுத்து .
பொங்கல்  வைக்கத்தான்  ஆசை. .////

இனிக்கும் சக்கரை  .
மணக்கும் ஏலக்காய்  .
கறந்த போலோடு சேர்த்து .
பொங்கிடத்தான் ஆசை. ...///

சுவைக்கு முந்திரி  திராட்சை .
பசு நெய்யோடு வறுத்துப் போட்டு
இன்பமாக  இல்லத்தில் கூடி நின்று. பொங்கிடத்தான் ஆசை. ...///

கரும்பு  கட்டோடு வைத்து  .
முக்கனி படையலோடு
மாவிலைத் தோரணம் ஆட .
வாசலிலே கோலம் சிரிக்க .
புத்தாடையோடும்  புன்னகையோடும். கதிரவன் வரவு பார்த்து .
பால் பானை பொங்க .
பொங்கலோ பொங்கல்
என்று கத்திடத்தான்  ஆசை. ...///

வெண்மேகம் கறுக்கவில்லை .
வேண்டிய மழை கொடுக்கவில்லை .
பரந்த நீர் பரப்பையும் திறக்கவில்லை . விதைத்த நெல்லும் செழிக்க வில்லை.

வறட்சி கண்ட நிலம் மீண்டுவிடவில்லை . வறுமையில் இருந்து நாங்கள் விடுபடவில்லை.
தண்ணீருமில்லை அழுது அழுது கண்ணீருமில்லை .
விவசாயி என் ஆசை ஆனதோ  நிராசை...///

வரும் காலம் வசந்த காலமாக வேண்டும் . வேளாண்மை  வளம் பெறவேண்டும் .
வறுமை இன்றி நாங்களும் மகிழவேண்டும். வரமாக இரு கரம் கூப்பி இறைவனிடம்.
கேட்ட படியே இன்பமாக   பொங்கல் கொண்டாடும் .ஏனையோருக்கு இந்த ஏழை விவசாயின் .
மனநிறைவான நல் வாழ்த்துக்கள்  .....////

   

No comments:

Post a Comment