புது நாத்து .
புது நெல்லு .
புதுப் பானை எடுத்து .
பொங்கல் வைக்கத்தான் ஆசை. .////
இனிக்கும் சக்கரை .
மணக்கும் ஏலக்காய் .
கறந்த போலோடு சேர்த்து .
பொங்கிடத்தான் ஆசை. ...///
சுவைக்கு முந்திரி திராட்சை .
பசு நெய்யோடு வறுத்துப் போட்டு
இன்பமாக இல்லத்தில் கூடி நின்று. பொங்கிடத்தான் ஆசை. ...///
கரும்பு கட்டோடு வைத்து .
முக்கனி படையலோடு
மாவிலைத் தோரணம் ஆட .
வாசலிலே கோலம் சிரிக்க .
புத்தாடையோடும் புன்னகையோடும். கதிரவன் வரவு பார்த்து .
பால் பானை பொங்க .
பொங்கலோ பொங்கல்
என்று கத்திடத்தான் ஆசை. ...///
வெண்மேகம் கறுக்கவில்லை .
வேண்டிய மழை கொடுக்கவில்லை .
பரந்த நீர் பரப்பையும் திறக்கவில்லை . விதைத்த நெல்லும் செழிக்க வில்லை.
வறட்சி கண்ட நிலம் மீண்டுவிடவில்லை . வறுமையில் இருந்து நாங்கள் விடுபடவில்லை.
தண்ணீருமில்லை அழுது அழுது கண்ணீருமில்லை .
விவசாயி என் ஆசை ஆனதோ நிராசை...///
வரும் காலம் வசந்த காலமாக வேண்டும் . வேளாண்மை வளம் பெறவேண்டும் .
வறுமை இன்றி நாங்களும் மகிழவேண்டும். வரமாக இரு கரம் கூப்பி இறைவனிடம்.
கேட்ட படியே இன்பமாக பொங்கல் கொண்டாடும் .ஏனையோருக்கு இந்த ஏழை விவசாயின் .
மனநிறைவான நல் வாழ்த்துக்கள் .....////
No comments:
Post a Comment