உள்ளக் குழியில்
கொள்ளை ஆசைகளை/
பத்திரமாய்
பதுக்கி வைச்சுகிட்டேன் /
ஒங்க கொள்ளிக்
கண்ணு நொள்ளியதால்/
நடுயாமத்திலே ஏக்கத்தோடு
சேதியாகச் சொல்லிக்கிட்டேன் /
ஒன்னோட ஆண் மூர்க்கம் கண்ணு /
எனது தூக்கமும் இழந்துக்கிட்டேன்/
கொவ்வை மூக்கை வச்சு
குட்டிக் கவிதையும் கிறுக்கிக்கிட்டேன்/
மெல்லிய புன்னகையைத்
திருடி கோடிட்டுக்கிட்டேன்/
உன் குறுநகையை
வாரி கோலமிட்டுக்கிட்டேன் /
சொல்லிக்க சொல்லிக்க ஒம்
பேரும் இனிக்கிறது என்னுக்கிட்டேன்/
சொல்லி முடிச்சிக்கிட்ட பின்னும் /
பதில் உரைச்சிக்காமல்
இருக்கக் கண்ணுக்கிட்டேன்/
சாமந்திப் பூவ சாமத்தில்
வாட விட்டுக்கிட்டாய்/
அழகுப் பதுமையை அழவைத்து
மௌனம் காத்துக்கிட்டாய்/
காத்தாடி போல் நெஞ்சைக்
கூத்தாட விட்டுப்புட்டாய்/
இவ்வுலகம் வெறுத்து
மண்ணுலகம் போயிடவே
நினைச்சிக்க வச்சிக்கிட்டா/
தாரை தாரையாய் கண்ணீர் வடித்து /
தேரையாய் தேயும் வேளை /
தேடியே வந்ததையா மாமனே
உம்மோட கடதாசியும்/
கடதாசியப் படிச்சதுமே
யென்னோட மூச்சும் குளிந்திடிச்சு/
இம்முட்டு ஆசையையும்
எங்கிட்டு வைத்திருந்தாய் /
அன்னைக்கே சொல்லி இருந்தாக்க/
இன்னைக்கு நானோ
ஒம் பொண்டாட்டி மாமா/