Saturday 28 December 2019

காட்டு மல்லி பூத்திருக்கு



தோட்டக் காரன் கவனிப்பு 
இல்லை/
தொட்டுப் பறிக்க விரல்கள் 
இல்லை/

மலந்து அழகாய் அமர்ந்து 
சிரிக்கின்றது/
வாடைக் காற்றுக்கு பருவம் அடைந்திருக்கின்றது/

தெருவோடு போற மச்சானும் 
மயங்கிட/
தேடி வந்துக்க பாதமும் 
தயங்கிட/

ஊரெல்லாம் பருவ மணம் 
மணக்கிறது/
ஊருக்குள் திருமணக் குரல் 
கேட்கிறது/

கருகமணி போட்ட கறுத்த புள்ள/
காட்டு வாழ் இனத்துப் புள்ள/
பூவுக்கு எதிராக மலர்ந்த புள்ள/
கருநாகக் காட்டு மல்லியாகப் பூத்தபுள்ள/


No comments:

Post a Comment