Friday 25 December 2020

பரவச ஆட்டம்

கொட்டும் மழையும்
கொடும் வெயிலும்.
தட்டும் இடியும் 
மிரட்டும் மின்னொளியும்.
பகலவனின் மாற்றம்.
படைப்பவனின் ஒரு தோற்றம்.

வாட்டும் வறட்சியும்
வதைக்கும் குளிர்ச்சியும்.
கலங்கடிக்கும் புயல் போரும். 
எழும் புவி அதிர்ச்சியும்
இயற்கை எடுக்கும் மாற்றம்
இறைவனின் உருமாற்றம்.

உச்சம் தொடும் வன்முறைகள்
மிச்சம் மீதி உள்ள அரக்கர் கூட்டம்.
பஞ்சம் பிளைக்க வந்தவனும் 
பதவி கேட்டு நடத்திரான் போராட்டம்.

தஞ்சம் கொள்ள வந்த மனிதன் 
நெஞ்சில்  அன்பு இல்லை  
ஆகோரம் கொண்ட கடவுள் 
ஆழியை அழைக்கிரார் 
அத்தனையும் அழிக்கிறார் 
பாவிகளை அழித்த இன்பத்தில் 
போடுகிறார் பரவச ஆட்டம்.


Wednesday 23 December 2020

குறுங் கவிதை

Saturday 5 December 2020

நினைவு கூர்வோம்

யானையை அழித்திட
ஒரு எறும்பு போதும்.
காட்டை அழித்திட 
ஒரு இரும்பு போதும்.
வீட்டை எரித்திட 
ஒரு  தீக்குச்சி போதும்.
மலையைச் செதுக்கிட
ஒரு உளி போதும்.

என்றெல்லாம்  பேசுவார்கள்.
அவை அக்காலமொழி.
அத்தனையும் ஓரம் கட்டியது 
நட்பு என்னும் பாம்பொன்று.
ஒட்டி உறவாடி 
கட்டியது பாடையொன்று.

சரித்திரப் 
பெண்ணை சாய்த்துவிட்டது
தரித்திரமொன்று .
வீரப் பெண்ணின் விவேகப் 
பேச்சை நிறுத்தி விட்டது.
வீணாய்ப் போனதொன்று.

துப்புக் கெட்ட கூட்டம் 
இன்னும் குற்றவாளியைக் கண்டு 
பிடித்திட துப்பரபு பண்ணுது 
நின்று கொண்டு.

அரசியலையும் தாண்டி
எந்தாளும் நேசிக்கத் தோனும் 
அம்மாவின் தன் நம்பிக்கைகளை 
அதன் அடிப்படையில் எப்போதும் 
நினைவு கூர்ந்திடும் நம்  எண்ணம்.

Thursday 3 December 2020

சொல்லிக் கொள்வேன்

ஒல்லிக் குச்சி 
உடலானாலும்.
#என்- உடலில் 
தசை எடுத்து 
#உன்- உருவச்சிலை 
செதுக்கிடுவேன். 

#எனது- 
உதிரத்தில் 
வண்ணமெடுத்து.
கண்ணிலே 
நீர் எடுத்து 
கலந்து 
வர்ணம் 
பூசிடுவேன்.

தூசு தட்டிய 
காற்றாய் 
#என்- மூச்சுக் 
குழாய் கொண்டு
வடித்துச் 
சளித்தெடுத்து 
#உமது-
உடலுக்குச் சுவாசம் 
கொடுத்திடுவேன்  .

தூய தமிழை 
இனிய தமிழை 
இனிதாய் 
உரைத்திட
#எனது - நுணி 
நாக்கினை அறுத்து 
#உன்னில்- 
பொருத்திடுவேன்.

இயற்கை அழகை #நீ-
வியர்ப்புடன் நோக்கிட 
என்ணிரண்டு 
கருவிழிகளையும் 
கண்ணம்மா 
#உமக்கு - 
தானமாய் தந்திடுவேன்.

வெளுப்பு 
வெள்ளரியில் 
தீட்டிய சாயம் போல் 
பெருத்த 
பூசணியில்  
சிறுத்த அளகு 
ஒன்று செய்திடுவேன்.

சங்கு அறுத்து 
ஆலம் பாலில்  
போட்டெடுத்து 
உப்பு நீரில் 
அலசி விட்டு
மின்னிடும் பற்களை 
அழகிய இதழோடு 
இணைத்திடுவேன்.

இன்னும் 
சொல்லிக் கொள்வேன்
#உனது- 
அங்கத்திற்குப் பங்கம் 
விளைந்து விடும் 
என்னும் எண்ணத்தில் 
விடை பெறுகின்றேன.