ஒல்லிக் குச்சி
உடலானாலும்.
#என்- உடலில்
தசை எடுத்து
#உன்- உருவச்சிலை
செதுக்கிடுவேன்.
#எனது-
உதிரத்தில்
வண்ணமெடுத்து.
கண்ணிலே
நீர் எடுத்து
கலந்து
வர்ணம்
பூசிடுவேன்.
தூசு தட்டிய
காற்றாய்
#என்- மூச்சுக்
குழாய் கொண்டு
வடித்துச்
சளித்தெடுத்து
#உமது-
உடலுக்குச் சுவாசம்
கொடுத்திடுவேன் .
தூய தமிழை
இனிய தமிழை
இனிதாய்
உரைத்திட
#எனது - நுணி
நாக்கினை அறுத்து
#உன்னில்-
பொருத்திடுவேன்.
இயற்கை அழகை #நீ-
வியர்ப்புடன் நோக்கிட
என்ணிரண்டு
கருவிழிகளையும்
கண்ணம்மா
#உமக்கு -
தானமாய் தந்திடுவேன்.
வெளுப்பு
வெள்ளரியில்
தீட்டிய சாயம் போல்
பெருத்த
பூசணியில்
சிறுத்த அளகு
ஒன்று செய்திடுவேன்.
சங்கு அறுத்து
ஆலம் பாலில்
போட்டெடுத்து
உப்பு நீரில்
அலசி விட்டு
மின்னிடும் பற்களை
அழகிய இதழோடு
இணைத்திடுவேன்.
இன்னும்
சொல்லிக் கொள்வேன்
#உனது-
அங்கத்திற்குப் பங்கம்
விளைந்து விடும்
என்னும் எண்ணத்தில்
விடை பெறுகின்றேன.
No comments:
Post a Comment