ஒல்லிக் குச்சி 
உடலானாலும்.
#என்- உடலில் 
தசை எடுத்து 
#உன்- உருவச்சிலை 
செதுக்கிடுவேன். 
#எனது- 
உதிரத்தில் 
வண்ணமெடுத்து.
கண்ணிலே 
நீர் எடுத்து 
கலந்து 
வர்ணம் 
பூசிடுவேன்.
தூசு தட்டிய 
காற்றாய் 
#என்- மூச்சுக் 
குழாய் கொண்டு
வடித்துச் 
சளித்தெடுத்து 
#உமது-
உடலுக்குச் சுவாசம் 
கொடுத்திடுவேன்  .
தூய தமிழை 
இனிய தமிழை 
இனிதாய் 
உரைத்திட
#எனது - நுணி 
நாக்கினை அறுத்து 
#உன்னில்- 
பொருத்திடுவேன்.
இயற்கை அழகை #நீ-
வியர்ப்புடன் நோக்கிட 
என்ணிரண்டு 
கருவிழிகளையும் 
கண்ணம்மா 
#உமக்கு - 
தானமாய் தந்திடுவேன்.
வெளுப்பு 
வெள்ளரியில் 
தீட்டிய சாயம் போல் 
பெருத்த 
பூசணியில்  
சிறுத்த அளகு 
ஒன்று செய்திடுவேன்.
சங்கு அறுத்து 
ஆலம் பாலில்  
போட்டெடுத்து 
உப்பு நீரில் 
அலசி விட்டு
மின்னிடும் பற்களை 
அழகிய இதழோடு 
இணைத்திடுவேன்.
இன்னும் 
சொல்லிக் கொள்வேன்
#உனது- 
அங்கத்திற்குப் பங்கம் 
விளைந்து விடும் 
என்னும் எண்ணத்தில் 
விடை பெறுகின்றேன.
 
   
No comments:
Post a Comment