கொட்டும் மழையும்
கொடும் வெயிலும்.
தட்டும் இடியும்
மிரட்டும் மின்னொளியும்.
பகலவனின் மாற்றம்.
படைப்பவனின் ஒரு தோற்றம்.
வாட்டும் வறட்சியும்
வதைக்கும் குளிர்ச்சியும்.
கலங்கடிக்கும் புயல் போரும்.
எழும் புவி அதிர்ச்சியும்
இயற்கை எடுக்கும் மாற்றம்
இறைவனின் உருமாற்றம்.
உச்சம் தொடும் வன்முறைகள்
மிச்சம் மீதி உள்ள அரக்கர் கூட்டம்.
பஞ்சம் பிளைக்க வந்தவனும்
பதவி கேட்டு நடத்திரான் போராட்டம்.
தஞ்சம் கொள்ள வந்த மனிதன்
நெஞ்சில் அன்பு இல்லை
ஆகோரம் கொண்ட கடவுள்
ஆழியை அழைக்கிரார்
அத்தனையும் அழிக்கிறார்
பாவிகளை அழித்த இன்பத்தில்
போடுகிறார் பரவச ஆட்டம்.
No comments:
Post a Comment