மோகத்துக்கு முக்காடு போட்டு விட்டு./
ஆசைக்கு அணை கட்டி விட்டு/.
காதலுக்கு கதவை சாத்தி விட்டு./
கற்பனைக்கு கட்டிடம் கட்டி விட்டு ..../
சோடிக் காணத்துக்கு
தடை போட்டு விட்டு,/
துணை நாடும் எண்ணத்துக்கு
குழி போட்டு விட்டு./
சுகம் தேடும் நெஞ்சத்தை
பஞ்சிட்டு எரித்து விட்டு /
இல்லற வாழ்வுக்கு முற்றுப்
புள்ளி வைத்து விட்டு ..../
எதிர் கால இலட்சியத்தை
உரமாகப் போட்டு./
உழைப்பு என்னும் மந்திரத்தை
மனதில் பதியமிட்டு./
பரந்த உலகில் வலம் வந்த பாவை /
சிரித்த உன் அழகிய தோற்றம் கண்டு ..../
மெல்லத் திரந்த விழி இரண்டும் /
சிறை பிடித்தது உடன் உன்னை /
தடை போட்ட மோகம் விடை
கொடுத்த ஆசை./
உடைத்தெறிந்து வந்து விட்டது
விழியின் இன்றோடு.../
(இவ்வாண்டு கம்பன் கவிக்கூடத்து விழா நூலுக்காக கொடுத்த தலைப்பு )😊