Sunday 9 September 2018

ஏக்கத்தின் பிரதிபலிப்பு

கரை தொடாத கடல் உண்டா..?
தவளை நீந்தாத குளம் உண்டா..?
மழை நீர் சேராத கிணற்று நீர் உண்டா ..?
காற்று தீண்டிடாத செடி தான் உண்டா ..?

பனி உறங்காத புல் உண்டா ..?
வண்டு சுற்றாத மலர் உண்டா ..?
வேர் நுழையாத நிலம் உண்டா ..?
கன்று ஈன்றுடாத பசு உண்டா ..?

இணை சேராத எருமை உண்ட ..?
கதிர் ஒளி தொடமல் தாமரை உண்டா ..?
உறவு கொள்ளாத உயிரினம் உண்டா ..?
நீ மட்டும் நித்தமும் எட்டியே நிற்பதில்
நியாயம் தான்   உண்டா ......................?

No comments:

Post a Comment