Tuesday 25 September 2018

முன்னேறு

முட்டி மோதி முன்னேறு
அந்த விதை போலே./
நிலத்தைக் கிழித்து
எழுந்து சிரிக்கும் முளை போலே./
புயல் அடித்தாலும் தாங்கி நின்று
விழுது விடும் ஆலமரம் போலே./
உறுதியான தைரியத்தை
உள்ளத்தில் ஒலிக்க விடு./
தாக்கம் தனிந்து ஊக்கம் தானாக எழும்./

மீண்டும்  மீண்டும் முயற்சி செய்/
ஒரு முறைக்கு இரு முறை. /
தோல்வி தொலைந்து /
வெற்றி ஒட்டிக் கொள்ளும்/
உலகிலே உன் புகழ் ஓங்கி விடும்.//

அடுத்தவனை கெடுத்து முன்னேறாதே./
ஆத்ம திருத்தியோடு உடல்
வருத்தி முன்னேறு. /
இதயத்தை இரும்பாக்கி /
துன்புறுத்தி முன்னேறாதே. /
உண்மை உழைப்பில் முன்னேறு./

ஊமை கண்ட கனவு
போல் காலத்தை கழிக்காதே./
எப்போதும் இலட்சியத்தோடு
நடை போட்டு முன்னேறு./
ஏழை எளியோரை வருத்தி முன்னேறாதே./

ஒரு மனிதனின் உயிருக்கு
மதிப்பு அளித்து முன்னேறு./
ஓயாது மூளைக்கு
வேலை கொடுக்காமல் /
ஓய்வு கொடுத்து சிந்தித்து /
செயல் படு  வெற்றிப் படி உன் பிடியில் /

       

No comments:

Post a Comment