Wednesday 12 September 2018

மனமே மயக்கமென்ன?

அரும்பு மீசை. /
குரும்புப் பேச்சு /
நெருஞ்சி தாடி/
கரும்புச் சிரிப்பு/
நெருப்புக் கோபம் /
கருமை வண்ணக்
கண்ணன் அவன் /
திருமுகம் கண்டு
மனமே மயங்கினாயோ ?

தேக்கமர உடல் /
தாங்கிப்பிடிக்கும் உள்ளம் /
சேர்த்து வைத்த சொத்து /
சேதாரம் இல்லா அங்கம் /
அடர்த்தியான  முடி  /விரிந்த மார்பு /
கொடுத்துண்ணும் குணம் /
கொடுமைக்கு கொந்தளிக்கும் எண்ணம் /
கண்டு என் மனம் மயங்கியதோ  ?

வாரியணைக்கும் அன்பு/
வாஞ்சை இல்லாத நெஞ்சம்/
இச்சை மூட்டியதோ /
தஞ்சம் அவன் தான் என்று/
மூங்கில் ஓசை போல்
மயங்கியே போனாயே பெண்  மனமே./

No comments:

Post a Comment