இடை பெருக்க நடை குறைய
உடல் தழர வயிறு உப்ப
பல உணவுக்குத் தடை போட்டு
கருவில் எனைச் சுமந்தாள் தாய்..!!
வாந்தியால் வதைக்கப்பட்டு
மசக்கைக்குள் சிக்குண்டு
மருந்தை விருந்தாக்கி
மாதங்கள் பல எனைத் தாங்கி
உடலிலே தங்க வைத்தாள் தாய்...!!!
கருவான நான் உருவெடுத்து
உலகத்துக்கு வருகை தரும் வேளை அம்மா பட்ட விலியை நான்
உணரவே பல ஆண்டு
காத்தருக்கவேண்டியதாயின்று
அன்று உணர்ந்தேன் தாயின்
வலியையும் பெருமையையும்
தியாகங்களையும்.....!!!!
என்வருகையால் நெகழ்ந்து
மெதுவாக முத்தமிட்டு
தொட்டு மகிழ்ந்த தந்தை
என் தேவைகளை பார்த்துப் பார்த்து
பூத்தி செய்தாரே அவரும் ஒரு சுமை தாங்கி...!!!
ஓடாகத் தேய்ந்து கூலியாக உழைத்தார்
தோள் வலிக்க என்னைச் சுமப்பார் சுகமென சொல்லிச் சிரிப்பார்
கை வலிக்க உழைத்தார்
கை சிவக்க அள்ளிக் கொடுத்து
என் ஆசையைகளை நிறைவு செய்தார் .!!
கடல் கடந்து சென்று பல ரணங்கள் சுமந்து சுகமான வாழ்வு இழந்து
சுமை என்று எனை நினையாது
அன்புச் செல்லமென நினைத்து
சொத்தாக குவித்தார்.....!!!
ஈருடலுக்கும் நான் ஓர் உயிரானேன்
அன்பு விழியானேன்
என்றும் எங்கள் உயிர் மகளே என்னும் புலம்பல் ஓசையோடு பாசம் காட்டும்
பாசமிக்க பெற்றோருக்கு
அடங்கிய மகளானேன்....!!!
தாய் தந்தை காட்டிய பாதைக்குத்
தடம் மாறப் பிள்ளையானேன்
பார்ப்போர் போற்ற கேட்போர் வியக்க
நானும் நல்ல நிலையிலானேன்...!!!
முதியோர் இல்லம் தேடமாட்டேன்
சீ என்று விரட்ட மாட்டேன்
சுமை என்று புலம்பமாட்டேன்
சுகமாக நானும் சுமந்திடுவேன்
தடி கொடுத்து பிடி கொடுத்து
உறவு என்று என் பேசும் தெய்வங்கள் இவர்கள் என்று போற்றிடுவேன்..!!!
பராமரித்திடுவேன் பெற்றவர்
உள்ளத்தை அன்பால் வெள்ளமாக்கி
நான் உழைத்திடுவேன்
இதுசாத்தியமோ? நான் அறியேன். சத்தியமாக கைவிடேன்..!!
No comments:
Post a Comment