Sunday 2 September 2018

வரம் ஒன்று தருவாயா?

கற்பவாதியாக
வரம் ஒன்று வேண்டும்./
கட்டில் பந்தத்திற்கு தொப்புள்
கொடி உறவு ஒன்று வேண்டும்./
மசக்கை என்னும் துயர்
நான் அறிய வேண்டும்./
மாங்காய் சாம்பல்
சுவைக்க வேண்டும். /
மனதிலே தாய்மை
உணர்வு காண வேண்டும். .../

பத்துத் திங்கள் அடி
வயிறு தடவ வேண்டும்./
அத்தை பாசம் என்
மேல் படர வேண்டும்./
அத்தான் வம்சம் வளர வேண்டும்./
இத்தனைக்கும் இறைவா  வரம் 
ஒன்று நீ தருவாயா  ....?

மார்பிலே பால் சுரக்க வேண்டும்./
மாற்றான் பிள்ளைக்கும்
நான் ஊட்ட வேண்டும்./
தாலாட்டுப்  பாட வேண்டும் /
பாட்டிலே தாய்மையின்
ஏக்கத்தைக்  கூற வேண்டும்./
பத்தாண்டு தவம் பலன்
கொடுக்க வேண்டும்./
மலடி என்னும் பட்டம் மறைய வேண்டும்./
இறைவா பிள்ளை
செல்வமதை  வரமாக  நீ தருவாயா.... ?

No comments:

Post a Comment