Wednesday 26 September 2018

ஆத்து மீன் குழம்பு

கழுவி சுத்தம் செய்த  ஆத்து மீன் : 1  கிலோ
உறித்த சின்ன வெங்காயம் - 150 கிராம்
நன்றாக பழுத்த தக்காளி-2
தேங்காய் பால் -2 கப்
பச்சை மிளகாய் - 4
மிளகாய் தூள் - 4 ஸ்பூன்
புளி சிறிதளவு

தாளிப்பதற்கு
சிறிதளவு இஞ்சி, பூண்டு
நசுங்கி வைத்துக் கொள்ள வேண்டும். கருவேப்பிலை
கொத்தமல்லி தளை தேவையான அளவு.

ஒரு பாத்திரத்தில்  எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு சிறிதளவு சின்ன சீரகம் போட்டு அது பொறிந்ததும்
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின்பு வெட்டி வைத்துள்ள சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். அது வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளி கரைசல் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்தவுடன்  மிளகாய் தூள் சேர்த்து அதனுடன் சேவையான  அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு பின் கழவி வைத்த மீனை குழம்பில் சேர்ந்து நன்கு கொதிக்க விடவும். நன்றாக வெந்ததும்  அதில் வெட்டி வைத்துள்ள கருவேப்பிலை கொத்துமல்லித்தழை போட்டு இறக்கி பரிமாறவும். சுவைத்து அருமையாக இருக்கும். செய்து பாருங்கள்

No comments:

Post a Comment