Wednesday 5 September 2018

இலக்கியம்


இலக்கியம்  வறுக்கப்படுகிறது
இலக்கியம்  துவைக்கப்படுகிறது.
இலக்கியம் சுரண்டப்படுகிறது
இலக்கியம் இதனால் கைகளும்
நிறைக்கப்படுகிறது .

இலக்கியம்  விலை பேசப்படுகின்றது
இலக்கியம் ஏற்ற தாழ்வு பார்க்கின்றது
இலக்கியம் இதை கூறுவோர் மனிதம்
மறைக்கப்படுகின்றது.

இலக்கியம்  துட்டுக்கண்டு தோள் சாகிறது
இலக்கியம்  பணத்தால் வாழுகின்றது
இலக்கியம்  கவிஞன் கையில்
இருந்து தவறி விட்டது.

இலக்கியம்  இலக்கியத்தின் பெயர் சொல்லி
இதயம் இல்லாமல் பணம் பறிப்போர்
கையில் சிக்கி விட்டது
இருந்தும் இலக்கிய வளர்ப்பு என்று
பொருள் கொண்டு வலம் வருகிறது
இந்த இலக்கியம்.

கசப்பான உண்மையோடு காலைவணக்கங்கள்

No comments:

Post a Comment