விருது என்பது உயிர்
காக்கும் தல கவசம் இல்லை
தலை சுமக்கும் கிரீடமும் இல்லை👑
படர முற்படும் கொடியை
தாங்கிப் பிடிக்கும் கிளை போல்
வளர நினைக்கும் எழுத்தாளனை
வளர்த்து விட கொடுக்கும் ஒரு
ஊக்க மருந்து போன்றவை.💊
சோர்ந்து போகும் மரத்துக்கு🌴
நீர் விட்டது போல் என்னுள்
மறைந்து இருந்த கற்பனைத்திறனை
வெளியே கொண்டு வர பல குழுமங்கள்
கை கொடுத்து தூக்கி விட்டனர் 💪
அந்த வகையில் அனைத்து குழுமங்களுக்கும் நன்றிகள் 🙏
டானிக் போன்று விருதுகளையும்
நீர் போன்று வாழ்த்துகளையும்
உரம் போன்று சான்றிதழ்களையும்
கொடுத்து என்னை ஊக்கப்படுத்தும்
குழுமத்திற்கும் எனது நட்புக்களுக்கும் நன்றிகள் 📢
பணம் கொடுத்துத்தான் விருது
பெறுவது என்னும் கூற்று முகநூல்
வீதியிலே உலாவுவதால் திறமைக்குக்
கிடைக்கும் பரிசும் பரிசுத்தம் இல்லாமல் போகின்றது 😢
#ஞாயிறு #சிவகாசியில் நடந்த #செந்தமிழ் #சாரல் குழுமத்தால்
வழங்கிய #ஊக்கவிருதும் #சான்றிதழும்
#கிச்சன்கில்லாடிகளோடு பயணித்தமைக்காகவும்
போட்டிக் கவிதையில்
#தேர்வு பெற்றமைக்காகவும் 🍔📝
இவை என் திறமைக்கு கிடைத்தவை
என்று நினைப்போர் என் மகிழ்ச்சியில்
பங்கு பெறலாம் 👍 ஏற்றுக்கொள்ள மறுப்போர் பதிவைக் கடந்து செல்லலாம் 🚶
செந்தமிழ் சாரல் நிருவாகிக்கும்
குழுமத்தாருக்கும் என் கவிதையை
தேர்வு செய்த நடுவருக்கும்
வேட்டை மின் இதழ் ஆசிரியருக்கும்
இதயம் கனிந்த. நன்றிகள் பல ❤❤🙏🙏🌹
No comments:
Post a Comment