கண்ணாலே கண்ணி வச்சுப் போனாளே /
தன்னாலே எனது நெஞ்சம் சிக்கியதே /
அவ பின்னாலே என் மூச்சும் ஓடியதே /
மண் மேலே நடந்த பாதம் /
விண் மேலே பறப்பதாக தோன்றியதே/
எண்ணத்தில் தூண்டில் இட்டாள் /
உள்ளத்திலே மெல்ல வலை விரித்து /
அதிலே அவள் முகத்தையும் முடிச்சு போட்டு விட்டாள் /
கன்னமது மதுக்கிண்ணமோ ?
இன்னும் போதை தெளியவில்லை என்னுள்ளே /
சின்ன சிரிப்பால் சிறை பிடித்தாள் /
சிக்குண்டு துடிக்கிறது என் மனசு /
என்ன அதிசயமோ அவள் கஞ்சாத் தோட்டத்து வஞ்சியோ ?
ஒற்றைப் பார்வையிலே /
கொஞ்சம் கொஞ்சமாய் போதை எற்றி /
தஞ்சம் இனிமேல் அவளது மஞ்சம் /
என்று இன்றே நான் உறுதிமொழி /
எடுக்கவே வைத்து விட்டாள் /
செங்கறையான் புகுந்திடாத /
கட்டெறும்பு ஊர்ந்து விடாத/
காட்டு யானை சுவைத்திடாத /
கட்டுக் கலையாத கட்டுடலழகி /
என் முன்னே அன்ன நடை போட்டு /
எனது இதயம் நுழைந்து விட்டாள் /
மின்னல் இடியோடு பிறக்கும் வேளை /
காந்தக் கண்ணால் பார்த்து விட்டாள் /
துருப் பிடித்த என் வேல் விழி
ஒட்டிக் கொண்டது /
கன்னியின் கண்ணி வச்ச
விழியிலே தங்கிக் கொண்டது /
No comments:
Post a Comment