தக்காளிக்காய். 5
பயத்தம்பருப்பு. அரை கப்
வத்தல் மிளகாய். 3
சீரகம். கால் ஸ்பூன்
மிளகு. கால் ஸ்பூன்
கடுகு. கால் ஸ்பூன்
உளுத்தம்பருப்பு. அரை ஸ்பூன்
பெருங்காயம். சிறிதளவு
எண்ணெய் 1 தேக்கரண்டி
தேங்காய். மூன்று ஸ்பூன் (துருவியது)
உப்பு தேவையான அளவு
தக்காளியை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
பயத்தம் பருப்பை உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
தேங்காய்,சீரகம்,மிளகு,மிளகாய் வற்றல் 2 சேர்த்து அரைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்
கடுகு சேர்த்து வெடித்ததும் சீரகம் மிளகாய் வற்றல் உளுத்தம்பருப்பு சேர்த்து வறுத்ததும்
நறுக்கிய தக்காளிகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.வதங்கியதும் சிறிது உப்பு சேர்க்கவும்.
பிறகு வேகவைத்த பயத்தம்பருப்பு சேர்த்து அத்துடன் அரைத்த தேங்காய் விழுதும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.
கமகமக்கும் தக்காளிக்காய் கூட்டு தயார்.
சேஷப்ரியா பாலாஜி
No comments:
Post a Comment