எதைக் கண்டு
உன்னிடம் மயங்குகிறேன் /
முறுக்கு மீசையும்./
கிறுக்குப் பார்வையும் /
இறுக்கிப் பிடித்தனவோ ? இதையமதை /
அதனாலே மயக்கம் பிறந்ததோ ......?
துடிப்பான பேச்சும்/
மடிப்புக் கலையாத சட்டையும் /
கடிவாளம் போட முடியாத கோபமும் /
கண்டு மயக்கம் பிறந்ததோ ....?
இரவு பகல் மயக்கம்
விலகாமல் உறங்குகின்றேன் /
உள்ளத்தை நெருங்கி வாவென
உரைத்திடவே தயங்குகின்றேன் /
உள்ளதை உள்ள படியே
சொல்லி விடாமலே கலங்குகின்றேன் /
உயிர்த்துடிப்போடு உன்னை
இணைத்திடவே ஏங்குகின்றேன் /
No comments:
Post a Comment