Wednesday 19 September 2018

உன்னிடம் மயங்குகிறேன்

எதைக் கண்டு
உன்னிடம் மயங்குகிறேன் /
முறுக்கு மீசையும்./
கிறுக்குப் பார்வையும் /
இறுக்கிப் பிடித்தனவோ ? இதையமதை /
அதனாலே  மயக்கம் பிறந்ததோ ......?

துடிப்பான பேச்சும்/
மடிப்புக் கலையாத சட்டையும் /
கடிவாளம் போட முடியாத கோபமும் /
கண்டு மயக்கம் பிறந்ததோ ....?

இரவு பகல் மயக்கம் 
விலகாமல் உறங்குகின்றேன் /
உள்ளத்தை நெருங்கி வாவென
உரைத்திடவே தயங்குகின்றேன் /

உள்ளதை உள்ள படியே
சொல்லி விடாமலே கலங்குகின்றேன் /
உயிர்த்துடிப்போடு உன்னை
இணைத்திடவே ஏங்குகின்றேன் /

 

No comments:

Post a Comment