Sunday 2 September 2018

இனிமேலும் தயங்க வேண்டாமே

வாழ்க்கை  ஒரு போர்க்களம்
மாண்டு விட்டால் அது துக்க களம்.
வக்கிரதக் குணம் கொண்ட அரசியல் அதிகரிகளால் இந்தியா வாரி சுருட்டிக் கொடுக்கிறது மயானத்துக்கு
பல அறிவாளிகளை.....!

கட்ட வண்டி ஓட்டி உழைப்பவன்
மகன்  கலட்டராகத் தடை 
விவசாயி மகள் வழக்கறிஞராகத் தடை 
துப்பரவு தொழிலாளி பெற்ற
பிள்ளை மருத்துவராகத் தடை  
பாமர மக்கள் பதவி பட்டம் வாங்கி
நிலையான புகழ் பெறத் தடை......!

புது புது சட்டம் போட்டு
தகக்தெறிகின்றான் ஏழைகளின் கற்பனைகளை திகைப்பூட்டுகிறது
கண்ணில் தென் படும் செய்திகளோ
பல ஏழை மாணவ மாணவியருக்கு பாடையை பரிசாகக் கொடுத்து
விட்டு பகட்டு வாழ்வு வாழும் அரசிக்கு
என்ன பரிசு கொடுக்க வேண்டும்  என்று தீவிரமாக சிந்தியுங்கள் மக்களே......!

தீ போல் எழுந்து
எரிமலையாய் குமுறுங்கள்
எறும்பு போல் கைகோர்த்து நின்று 
நீங்கள் எதிர்க்கப் போவது
சாதியை இல்லை மதத்தை இல்லை மொழியை இல்லை அராஜகமான
அரசுவை அநீதயான ஆட்சியை......!

தனி நாடு கேட்டு கோரிக்கை
வைக்கவில்லை
குண்டு வைக்கவில்லை
கொலை செய்யவில்லை
உங்களைத் தீவிரவாதி பட்டியலில் தள்ளி விடுவார்கள் என்று அஞ்சுவதுக்கு....!

இந்தியன் என்னும் 
ஒருமைப்பாட்டுடன் ஏற்ற இறக்கம்
பாராமல் இணைந்து களத்தில்
இறங்குங்கள் மக்கள் சக்தியை
காட்டுங்கள் இன்னும் ஓர் உயிர் ஏமாற்றத்தால் திறக்க வேண்டாம்
என்றால் உங்கள் கோளைத்தனத்தை உடைத்து புறப்படுங்கள்.....!

ஓட்டு கேட்டு வருவோரை
ஓட்டம் காட்டுங்கள்
வாக்கு கேட்டு வரும் வாய்
பேச்சாளனுக்கு செருப்படி கொடுத்து விரட்டுங்கள் மக்களின் கை ஓங்கினால்  எமனும் நடுங்குவான் என்று
நிருபித்துக் காட்டுங்கள்
அமைதி காக்காதீர்கள் அவலக் குரல் ஓசைக்கு வழி திறக்காதீர்கள் உரிமைக்
குரல் ஒலிக்கட்டும் நாடு எங்கும்.....!

இறந்த சகோதரியின் ஆத்மா சாந்திக்காக இறைவனை வேண்டுகிறேன்.....!😞😭

                 

No comments:

Post a Comment