Friday 19 February 2016

சின்னப்பயலே கேளடா


கொட்டும் மழையில் தலையை விடாதே.

தேங்கிய சேற்று நீரில் காலை விடாதே.

அதை எடுத்துக் கூறும் தாத்தா
சொல்லை தட்டி விடாதே.

அவை இரண்டுமே கெடுதல்
புரிபவை என்பதை மறவாதே.

முதியோரை அவமதிக்காதே

உண்மை அன்பை நிராகரிக்காதே.

திருட்டும் புரட்டும் செய்யாதே.

தேடி வரும் பொல்லாப்பு என்பதை மறவாதே.

பான் கிணற்றில் கல் எறியாதே.

அதை திருத்த வருவோருக்கு வீன் சொல் எறியாதே.

தாறு மாறாக பாதையில் செல்லாதே.

பார்ப்போர் கேட்வோரிடம் கெட்ட
பெயர் எடுக்காதே.

பெற்ற அன்னை மனம் நொந்து
திட்டும் படி நடக்காதே.

பெற்ரோருக்கு தோள் கொடுக்க மறக்காதே.

No comments:

Post a Comment