Friday 19 February 2016

புரிவது எப்போது நீ

நீ மறந்து  விட்டாய்
என்பதற்காக நான்
அழித்து விட முடியுமா
என்  பாசத்தை.....////

  சிலேடையில் எழுதியதா
அழி இறப்பர் கொண்டு
அழிக்க.  சுவரொட்டியா
கிழித்து விட்டு நடக்க...../////

உன்னைக் கண்ட
நாள் முதல் நெஞ்சில்
விதை போட்டு வேர் விட்டு
விழுதாகி வளர்ந்து
இருக்கும் பாசம். ....../////

பரீட்சை வைக்கின்றாயே
நீஎனக்கு  இது வேசம் என
நினைத்தாயோ....?

உரசிப் பாக்காதே
தீயில் போட்டு சுட்டும்
மங்காது வெளித்திருக்கும்
சங்கு போலேதான்
இருக்கு உன் மேல் பாசமும்
என் நெஞ்சுக்குள் .....////

No comments:

Post a Comment