நீ மறந்து விட்டாய்
என்பதற்காக நான்
அழித்து விட முடியுமா
என் பாசத்தை.....////
சிலேடையில் எழுதியதா
அழி இறப்பர் கொண்டு
அழிக்க. சுவரொட்டியா
கிழித்து விட்டு நடக்க...../////
உன்னைக் கண்ட
நாள் முதல் நெஞ்சில்
விதை போட்டு வேர் விட்டு
விழுதாகி வளர்ந்து
இருக்கும் பாசம். ....../////
பரீட்சை வைக்கின்றாயே
நீஎனக்கு இது வேசம் என
நினைத்தாயோ....?
உரசிப் பாக்காதே
தீயில் போட்டு சுட்டும்
மங்காது வெளித்திருக்கும்
சங்கு போலேதான்
இருக்கு உன் மேல் பாசமும்
என் நெஞ்சுக்குள் .....////
No comments:
Post a Comment