நிலையான நீல வானம்
ஓடும் வெள்ளை மேகம்
உருண்டு திரியும்
நிலவு சிரித்திருக்கும்
நட்சத்திரம் இவைகள்
சாட்சி .......உனக்காகவே
நான் வாழ்கிறேன்.........!!!
கொட்டும் மழை
குளிரும் பனி
சுடும் வெயில்
வீசும் தென்றல்
இவைகள் சாட்சி..
.உனக்காகவே நான்
வாழ்கிறேன்..........!!!
படர்ந்த கொடி
வளர்ந்த மரம்
மலர்ந்த மலர்
கனிந்த கனி
விழுந்த விதை
இவைகள் சாட்சி......
உனக்காகவே நான்
வாழ்கிறேன்.......!!!
பாடும் குயில்
பேசும் கிளி
ஆடும் மயில்
கூவும் சேவல்
சிணுங்கும்
சில்வண்டு
இவைகள் சாட்சி....
உனக்காகவே நான்
வாழ்கிறேன்..........!!!!
குரைக்கும் நாய்
திருடும் பூனை
கனைக்கும் குதிரை
துள்ளும் முயல்
குதிக்கும் மான்
இவைகள் சாட்சி.....
உனக்காகவே நான்
வாழ்கிறேன்..........!!!!
மாறி மாறி வரும்
இரவும் பகலும்
என் தூக்கம்
கலைக்கும் கனவும்
தட்டி எழுப்பும் நினைவும்
இவைகள் சாட்சி.......
உனக்காகவே நான்
வாழ்கிறேன்...........!!!
வழி பார்க்கும் விழி
எதிர் நோக்கும் ஆசை
காத்திருக்கும் மோகம்
கலங்கடிக்கும் கற்பனை
இவைகள் சாட்சி.........
உனக்காகவே நான்
வாழ்கிறேன்............!!!!!
நான் தினமும் முகம்
பார்க்கும் கண்ணாடி
சூடிக் கொள்ளும் மலர்
அணிந்து கொள்ளும்
அணிகலன் உறங்கும்
மெத்தை கட்டி அணைக்கும்
தலையணை தனிமையில்
நான் புலம்புவதை பார்க்கும்
எனது அறை இவைகள் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்
உனக்காக மட்டுமே வாழ்கிறேன்.
No comments:
Post a Comment