இந்தக் காதல் புரியும் சாதனை
ஒன்றா இரண்டா எடுத்துக் கூற.
காதலியை ஓவியமாகவரைய வைக்கும்
காவியம் பாட வைக்கும்
கவிஞனாக்கி கவிதைகளை
கிறுக்க வைக்கும் .........♥
ஒன்றா இரண்டா எடுத்துக் கூற.
காதலியை ஓவியமாகவரைய வைக்கும்
காவியம் பாட வைக்கும்
கவிஞனாக்கி கவிதைகளை
கிறுக்க வைக்கும் .........♥
துடிக்க வைக்கும்
தவிக்க வைக்கும்
தனிமையில் சிரிக்க வைக்கும்
பொய் உரைக்க வைக்கும்
பசியை மறக்கடிக்கும்
தூக்கத்தை வெறுக்க
வைக்கும்............................♥
்
நன்மை தீமை இரண்டுக்கும் உள்ள
வேறு பாடை மறைத்து வைக்கும்
கோபத்தை தூண்டும்
பாசத்தை அழிக்கும்
தந்தை தாயை எதிரியாக்கும்.........♥
வேறு பாடை மறைத்து வைக்கும்
கோபத்தை தூண்டும்
பாசத்தை அழிக்கும்
தந்தை தாயை எதிரியாக்கும்.........♥
துக்கி நிறுத்தி சிகரம் வரை
கொண்டு செல்லும்
அதி பாதாளத்திலும் தள்ளும்
போதையில் தள்ளாட வைக்கும்
தாடியுடன் நடமாட வைக்கும்.........♥
கொண்டு செல்லும்
அதி பாதாளத்திலும் தள்ளும்
போதையில் தள்ளாட வைக்கும்
தாடியுடன் நடமாட வைக்கும்.........♥
பேதையைக் கண்டால் தள்ளி வைக்கும்
பலிவாங்கும் குணத்தை வரவழைக்கும்
வாழ்க்கையைத் தொலைக்கும்
பாதையை தடம் புரட்டிப் போடும்............♥
பலிவாங்கும் குணத்தை வரவழைக்கும்
வாழ்க்கையைத் தொலைக்கும்
பாதையை தடம் புரட்டிப் போடும்............♥
கல்லு முள்ளு தெரியாத காதல்
கல்லின் மேல் முளையிட்ட செடியாய்
கருகி விட்டால் தன்னையே
அழிக்கும் நிலைக்கு இழுத்துக் கொண்டு
நிறுத்தும்...................♥
கல்லின் மேல் முளையிட்ட செடியாய்
கருகி விட்டால் தன்னையே
அழிக்கும் நிலைக்கு இழுத்துக் கொண்டு
நிறுத்தும்...................♥
கண் பார்த்து இதழ் பேசி மனம் இடம்
கொடுத்து கனிந்த காதல்
இல்லறத்தில் இன்பமாகப் பறக்க
இறக்கை விரித்துக் கொடுக்கும்..........♥
கொடுத்து கனிந்த காதல்
இல்லறத்தில் இன்பமாகப் பறக்க
இறக்கை விரித்துக் கொடுக்கும்..........♥
முதிர்ந்த காதல் கனியாகும்
உதிர்ந்த காதல் சருகாகும்
கசந்தாலும் துவர்ந்தாலும் இனித்தாலும்
கசக்கி எறிந்த காகிதமாவதில்லை காதல்...................♥
உதிர்ந்த காதல் சருகாகும்
கசந்தாலும் துவர்ந்தாலும் இனித்தாலும்
கசக்கி எறிந்த காகிதமாவதில்லை காதல்...................♥
அன்றும் சரி இன்றும் சரி என்றும் சரி
கல்லில் வடித்த சிற்பமாய் உலகில்
காதல் ஒரு நிலையாகவே இனிதே
வலம் வருகின்றது இனிமையாக .......♥
கல்லில் வடித்த சிற்பமாய் உலகில்
காதல் ஒரு நிலையாகவே இனிதே
வலம் வருகின்றது இனிமையாக .......♥
No comments:
Post a Comment