ஊரார் அழைக்கவே
உரிமையோடு பெயர்
உன் தந்தையார் வைத்தார்
உன்னை நான் அழைக்கவே
உறவாக நினைத்து
உரிமையோடு ஒரு பெயரிட்டேன்.
வருவோர் போவோர் எல்லாம்
அப்படி உன்னை அழைப்பது
கண்டு எரிச்சலோடு எழுகிறது
பொறாமை இன்று.
கொஞ்சம் அதிகமாகவே
வெம்பி மனம் பொங்குது
கண்ணீரும் சேர்ந்து.
நீ என் உரிமை அந்தப் பெயர்
இட்ட எனக்கே அவையும் உரிமை
எப்படியடா அனுமதித்தாய் அது போல்
அனைவரையும் அழைக்க விட்டாய் .....////
No comments:
Post a Comment