Wednesday, 24 February 2016

அவல நிலையில் விவசாயி


பறவை  முதல் மனிதன்
வரை  உண்ணும்  முக்கிய
உணவு  நெல்லில் இருந்து
கிடைக்கப் பெறும் அரிசி தான் .
அந்த.நெல்மணி  இப்போ
கண்  முன்  கடன்  மணியாக.
காட்சி  தருகின்றது.
 
வான்மழையை  நம்பி  விதை
போட்ட. காலம்  மாறி  நிலத்தின் 
நீரை  நம்பி   விதை போட்ட
காலம்  வந்து  இப்போ
இரண்டுமே கை  விட்டு
போய்  கண்ணீர்  விட்டு
வாழ்கை  நடத்தும்  அவல.
நிலை  வந்து  விட்டது.

விவசாகியின் வாழ்விலே
உழுவ. மாட்டையும்  வித்து 
உண்ணும்  அவல. நிலையில்
சேற்றில்  வைத்த. காலும்
நாற்று  நட்ட. கையும் 
ஏக்கத்தோடு  பார்கின்றது  
வறட்சி  அடைந்த. பூமியை
நீர்  நிறைந்த. கண்ணுடன் .

உலகில்  உள்ள. உயிர்
அனைத்துக்கும்  சோறு
போட்டவன்  வீட்டில்
ஒரு  நேரம்  வயிறு 
நிறைய. சாப்பிட. வழி 
இல்லை  அவன்  குழந்தை
பசியில்  வாடி வதங்குகின்றனர் .

அடகு  வைத்தும்   நட்ட விதை கை விட்டு
விட்டதால்  அடகு வைக்கவும் ஏதும்
இல்லை கட்டிய தாலியை
தவிர கொட்டி கொட்டிக் காசைப் போட்டு
விதைத்து விட்டு வானத்தை ஏக்கத்தோடு
பார்த்து  ஏமாந்தவன் வீட்டையும்
இழந்து  தெருவுக்கு வரும் அவல
நிலை  நாகரிகம் மாறினாலும்
விவசாகி வாழ்வு  எப்போதும்
வெளிப்பு இல்லாத இருட்டறை தான்  .

புன்னகையும் இல்லை
பொன் நகையும் இல்லை
வறன்ட பூமியை பார்த்து
பார்த்து இருண்ட வாழ்க்கை
வாழும் அவல நிலை இது
மாறுமா? மாறுமா? மாற்றம்
காணுமா? இந்த நிலை.

    

No comments:

Post a Comment