தேள் கொட்டியதும்
தெரியாமல் அமர்ந்து
இருக்கின்றேன்..
உன்னாலே..எல்லாம்
உன்னாலே....!!!
தேள் ஒன்று ஓடுது
என்று காட்டி விட்டு
அது கொட்டும் போது
வந்த வலி கூடத்
தெரியலயே...
உன்னாலே எல்லாம்
உன்னாலே....!!!
என் உள்ளத்தின் வலி
அதிகரித்ததால் உடலின்
வலி தெரியலயே..
உன்னாலே..எல்லாம்
உன்னாலே...!!!
வலி...வலி..என்று
வரி..வரியாக
வரைகின்றேன் எழுது
கோலின் வலியையும்
மறந்து...உன்னாலே
எல்லாம்...உன்னாலே...!!!
நினைத்து..நினைத்து
நினைவயும் இழந்து
நிம்மதி என்னும்
சொல்லையும் மறந்தேன்
உன்னாலே..எல்லாம்
உன்னாலே...!!!
உயிர் உள்ளது தெரிகின்றது
உணர்வு உள்ளதும்
புரிகின்றது உணர்ச்சியும்
வருகின்றது எல்லாம்
என்னைப் பார்த்து கேலி
செய்கின்றது..உன்னாலே
எல்லாம்..உன்னாலே...!!
ஒரு முறை நான் கேட்ட
வரம் கிடைக்க வேண்டும்
அவையும் உன்னாலே
உன்னாலே..உன்னாலே..
மட்டுமே கிடைக்க வேண்டும்
என்பதே..என்நாளும்..
என்நாளும் என் ஆசையே...!!!
No comments:
Post a Comment