Sunday 21 February 2016

தாலாட்டு


ஆரிரோ==ஆராரிரோ
யார் அணைக்க வில்லை
என்று நீ அழுகின்றாய்
ஆண்டவனும் முத்தம்
கொடுக்கும் முல்லை
நீ அல்லவா முகம் சிவக்க
அழுவது ஏனோ==ஆராரிரோ
ஆரிவரோ===!!!

நீ மெல்லத் தூங்கு சின்ன
விழியை மெது  மெதுவாகாக
மூடி பட்டு மெத்தை நான்
போட்டு பாடுவேன் தாலாட்டு
ஆராரோ===ஆரிரரோ....!!

அவர் அணைக்கும்
போது வெட்கப்பட்டு
இஷ்ரப்பட்டு ஈன்று
நான் எடுத்த கட்டிக்
கரும்பே...ஆராரோ
ஆரிவரோ...!!!

தந்தை தோள் சாய்ந்து
நான் அச்சு வாராமாக
வாங்கியெடுத்த அச்சு
வெல்லமே என் செல்லமே
ஆராரி==ராரிவரோ..!!!

பத்து விரல்கள்  தான்
விளையாடி பக்குவமாக
உன்னை நான் வாங்கி
பத்து மாதம்  மறைத்து
வைத்து ஊருக்கு நான்
காட்டிய பவள முத்தே
ஆராரோ===ஆரிவரோ..!

உன் மல்லிகை
கன்னங்கள் வலி
கொடுக்கின்றதா
உன் தந்தை சிந்திய
முத்தத்திலே==ஆரிரோ
ஆராரிராரரோ==!!!

கண் உறங்கு கண்
உறங்கு வின் மீன்கள்
நீந்துவதை நான் காட்டுவேன்
நீ உறங்கி விழித்துஎழுந்து வா
மகனே== ஓ====ஆராாாாாரோ
ஆரிரோ....!!!

        

No comments:

Post a Comment