Monday 8 February 2016

மனச்சரிவு

ஒட்டி உறவாடி வெட்டி
விட்டு போகின்றான்

காட்டியும் கொடுக்கான்
மூட்டியும் கொடுக்கான்

கட்டித் தழுவி நீ தான்டா
கவிஞன் என்று புகழாரம்
உரைக்கான் 

எந்த இடத்தில்
இவன் பெயரைக் கிறுக்கினால்
பொருத்தமாக இருக்கும்.

நினைத்துப் பார்க்கையிலே
வருத்தமாக இருக்கிறது

எந்த இடத்துக்கும் இவர்கள்
பொருத்தமானவர்கள் இல்லை

என்று நிராகரிப்பு  ஓட்டுக்கள்
நிறைகின்றது.

மதிப்புக் கொடுத்த
சொந்தம் எல்லாம்
விலகி விட்டது

அவர்களின்
மதிகெட்ட செயல் கண்டு

விதி விட்ட வழி காலம்
புகட்டும் ஒரு நாள்  நல்ல
பாடம் என்று

உருவம்
பெரிது உள்ளம் சிறியது

உண்மையை சொல்வோரை
ஏற்று நடப்பது அரிது

புரிதல்
இல்லா உறவு அதனாலே பிரிதலை
சந்திக்க நேர்கின்றது

விரிவாக உரைக்க வரிகளோ
மிகப் பெரிது பார்ப்போருக்கு
உண்டாகும் மனச்சரிவு

        

No comments:

Post a Comment