கானக் கருங்குயிலே
அவனைக் காணக்
கிடைக்கலையே.....///
கூவும் ஆண் குயிலே
அவனைக் கூட்டி வர நீ
நினைக்கலயே....///
சோலைக் கருங்குயிலே
என் சோகம் உமக்கு
புரியலயே......//
பூந்தோப்பு சிறு குயிலே
என் மனவருத்தம் உமக்கு
தெரியலயே.....///
மாந்தோப்புக் கருங்குயிலே
என் மனசி தவிக்குதடி
சிறு குயிலே. .....///
கரும்புக்காட்டு கருங்குயிலே
என் கறுத்த மச்சானைக்
காணலயோ...../////
மூங்கில் காட்டு கருங்குயிலே
ஓங்கி வளர்ந்த மூங்கில்
மரத்தோரம் என்னைத் தாங்கி
நின்றவரை நீ பார்க்கலயோ......///
மந்தாரக் குயிலே அவர்
வந்தாரென்னா கூவி
அழைத்துவிடு மறவாமல்
என்னையடி குயிலே
குயிலே கருங்குயிலே.....////
No comments:
Post a Comment