Sunday 28 February 2016

கருங் குயிலும் காட்டு ராணியும்

கானக் கருங்குயிலே
அவனைக் காணக்
கிடைக்கலையே.....///

கூவும் ஆண் குயிலே
அவனைக் கூட்டி வர நீ
நினைக்கலயே....///

சோலைக் கருங்குயிலே 
என் சோகம் உமக்கு
புரியலயே......//

பூந்தோப்பு சிறு குயிலே
என் மனவருத்தம் உமக்கு
தெரியலயே.....///

மாந்தோப்புக் கருங்குயிலே
என் மனசி தவிக்குதடி
சிறு குயிலே. .....///

கரும்புக்காட்டு கருங்குயிலே
என் கறுத்த மச்சானைக்
காணலயோ...../////

மூங்கில் காட்டு கருங்குயிலே
ஓங்கி வளர்ந்த மூங்கில்
மரத்தோரம் என்னைத் தாங்கி
நின்றவரை நீ பார்க்கலயோ......///

மந்தாரக் குயிலே அவர்
வந்தாரென்னா கூவி
அழைத்துவிடு மறவாமல்
என்னையடி குயிலே
குயிலே கருங்குயிலே.....////

 

No comments:

Post a Comment