விருந்தினர் வருகையின் போது
முகம் மலர்ந்து புன்முறுவலுடன்
வரவேற்று அமர்ந்து அவர்களுடன்
கலந்துரையாடி உபசரித்து அன்போடு
வழி அனுப்பி வைக்கவேண்டும்.....////
அப்போது மீண்டும் வாருங்கள்
என்ற வார்த்தையை மறவாது
கூறி வீட்டின் பாதி வழி வந்து
வழி அனுப்பி வைப்பதுதான்
தமிழர் பண்பாடு. ....///
உறவின் அன்பின் வெளிப்பாடு.
நல்ல குணத்தின் செயல்பாடு.
பண்பான மனிதர்கள் என்ற
அடையாளத்தின் பொருட்பாடு.....//
ஆனால் அந்த நடை முறைகளை
இப்போது கண்டு பிடிக்கவே
படவேண்டும் பெரும் பாடு. ..///
வருவோர் போவோர் யார் யார்
என்று தெரியாத வாறு குடும்ப
அங்கத்தவர்களின் நடை முறை
வாழ்கை என்று ஆகிப்போச்சு .....///
ஆளுக்கு ஓர் அறை ஆளுக்கு ஓர்
தொலைக் காட்சி பூட்டிய அறையின்
வழியே வெளியாவது நெடுந்தொடர்
ஒலியே......////
வாழ்கையே வெறும் நிழல்படம்
என்று மாறிப்போச்சு பேச்சுவார்த்தை
குறைந்து போச்சு உறவினர் போக்கு
வரத்து சரிஞ்சி போச்சு இடஞ்சல்கள்
உறவு வருகை என்ற காலம் வந்தாச்சு ........///
No comments:
Post a Comment