Thursday 25 February 2016

பிரியாத பிரியம்

14 வயது முதல் நான்
அங்கு வந்திருந்தால்.
பார்த்துப் பார்த்து  பழகிருப்பேன்.
பேசிப் பேசி நெருங்கிருப்பேன்.
உன் அன்பை முழுமையாக
கொள்ளை கொண்டிருப்பேன் ...//

தொட்டாற் சிணுங்கி போல்
இருக்கும் என் வெட்கம் பறந்திருக்கும்.
உன் தோட்டத்தின் மலராக மனம் மலர்ந்திருக்கும்
வானளவு என் கனவு வளர்ந்திருக்கும்.
வாழ்க்கை பூராவும் நம் உறவு தொடர்ந்திருக்கும்....///

அரசியல் வாதி போல்  நீ
அடிக்கொரு தடவை மாறிஇருக்கமாட்டாய்
சமுகத்தின் முன்னே நாம் சிறந்த
காதலராக வலம் வந்திருப்போம் .....//

அண்ணாந்து பார்த்து ஊர்
வியர்க்கும் வண்ணம்
சாணக்கியனாக உன்னை நான்
உயர்த்திப் பார்த்து மகிழ்ந்திருப்பேன்.....////

சமய சடங்குக்கும் உன்னை இழுத்திருப்பேன்.
நீ சரித்திரம்  படைக்கத் துணையாக
இருந்திருப்பேன்.
என் இதயம் அமர்ந்தவனே உன்னை
இமயம் என்று பெருமை கொண்டிருப்பேன்.....////

திருப்பதி லட்டுப்போல் இனிக்கின்றதையா
நினைக்கையிலே திரும்ப திரும்ப உதிக்குதையா
நெஞ்சுக்குள்ளே .....////

தீந்தமிழ் சுவை போலேஇருக்கின்றதையா
வஞ்சி மனசிக்குள்ளே
கண் முன்னே காட்சிகளாக வந்து வந்து
போகின்றதையா
பேச்சு வார்த்தை நமக்கிடையில்
இல்லாத இந்த வேளையிலும்......////

        

No comments:

Post a Comment